Sunday 3 July 2016

அவரவர் அவசரம்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

ராம் வேலை இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. காலையில் நடந்த நேர்முகப்பரீட்சைக்கு மாலைக்குள் முடிவு சொல்வோம் என்றார்கள். பதிலுக்காகக் காத்திருந்தான்.

தொலைபேசி அடித்தது. பதறியபடி எடுத்தான். மறுமுனையில் இலங்கையில் இருக்கும் அண்ணா.

“மகளுக்கு கலியாணம். முடிஞ்சதை அனுப்பு.

வங்கிக் கணக்கை அண்ணா சொல்லுகையில் ராமின் கைபேசி அடித்தது.

“அண்ணா... லைனிலை இருங்கோ 


கைபேசியில் வேலை கிடைக்கவில்லை என்ற செய்தி. மீண்டும் அண்ணா...என்ற போது மறுமுனையில் ரெலிபோன் வைக்கப்படிருந்தது.

No comments:

Post a Comment