Monday 31 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

10.   புகையிரதத்தில் பறிபோன
      மகாதேவன்.


புதிதாகக் கல்லூரிக்குக் கொண்டு வந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் திருப்தியாகவே கடமை புரிந்தனர். எனினும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் இருக்கவே செய்தது. இது பெரிதும் க.பொ.த. உயர்தர வகுப்பு ஆசிரியர்களுக்கே பொருந்தும்.

உயர்தர வகுப்புப் பாடத்துக்கு ஓர் ஆசிரியரை நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார். அவர் நகரப் பாடசாலையிலிருந்து எமது கல்லூரிக்கு மாற்றுவிக்கப்பட்டார். அந்த ஆசிரியருக்கு அந்தப் பாடத்தில் தேவையான ஞானம் இல்லை. பாட ஆயத்தம் செய்தும் அவரால் தேவையான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கரும்பலகையில் எழுதுவதில் அடிக்கடி தவறுகள் தலைகாட்டின. மாணவர்களுக்கும் ஆசிரியருக்கு மிடையில் தர்க்கம். நாட்கள் நகர நகர வகுப்பறையில் ஒரே கூச்சல். மாணவர்கள் வினாக்கள் எழுப்பும் பொழுது, ஆசிரியர் நிதானத்தை இழந்து நின்றார். பக்கத்து வகுப்புக்களில் கற்பித்த ஆசிரியர்கள் முறைப்பாடுகள் செய்தனர். அந்தப் பிரச்சினையை எப்படிச் சுமுகமாகத் தீர்ப்பது?

Saturday 29 October 2016

அப்பா! நீங்கள் சொல்வது சரிதான்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

கனகரத்தினம் குடிச்சுப் போட்டு தெருவுக்கு தெரு விழுந்து கிடப்பார்.

பிள்ளைகள் அவரின் போதை தெளிவித்து உணவு குடுத்து,
“அப்பா இனிமேல் எங்கட மானத்தை வாங்காதையுங்கோ” என்பார்கள்.

“என்ரை நாலு பிள்ளையளையும் படிப்பிச்சு நல்ல பண்புகளோடு வளர்த்து விட்டிருக்கிறன். எனக்கு நீங்கள் அறிவுரை சொல்ல வேண்டாம்” தந்தையார் சொல்ல,


”அதாலைதான் நீங்கள் என்ன கூத்தாடினாலும் நாங்கள் உங்களை வடிவாகப் பாக்கிறம்” என்றார்கள் பிள்ளைகள்.

Saturday 22 October 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

 
by

Kathir Bala Sundaram

Chapter 16
Bona Fide Tigers

February 9th, 2006 arrived without fanfare, without celebration. Yet for a few people, the date for paying Vasantha Valautham’s fine became significant in ways they never dreamed possible.
Haran Kandiah sat on the narrow bench that lay within the shadow of an ironwood tree, the Ministry of Political Affairs before him. He wanted to see his sister again.    
He coughed once and then craned his neck to look down the road, hoping to see his niece’s rented car approaching from Colombo, the capital of Sri Lanka. Dr. Maithily Rooban had arrived in Sri Lanka from Australia the previous day, so Haran expected her along soon.

Thursday 20 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

9. குட்டிப் புத்தகம் போதுமா?
                    
           
         தாம் பல்கலைக்கழகப் பட்டத் தேர்வுக்கு எடுத்த பாடங்களையே, உயர்தர வகுப்புகளில் அற்பளவு திருப்தியாகக்கூடக் கற்பிக்க முடியாத ஆசிரியர்களும் கடமை புரிந்தார்கள். அவ்வாறானவர்கள் தமது இயலாமையை ஏற்றுக்கொண்டு வேறு கீழ் வகுப்புகளில் பாடங்கள் எடுத்திருக்கலாம். சிலர் அப்படிச் செய்யாது, வகுப்புக்களுள் புகுந்து, கடமை புரிவதாக நடித்துக் கொண்டிருந்தார்கள். எத்தொழில் புரிபவருக்கும் மனச்சாட்சி இருக்க வேண்டும். இளைய சமுதாயத்துக்குப் பாம்பாட்டி வித்தை காட்டக்கூடாது. ஒரு பதம்:

Wednesday 19 October 2016

மெளனம் கலைகிறது (3)


 

தொகுப்புகளின் கதை

அவுஸ்திரேலியாவில் பலர் சேர்ந்து எழுதிய கதைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்புகள் வந்திருக்கின்றன. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அத்தகைய தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. ‘உயிர்ப்பு’ சிறுகதைத்தொகுதி, ‘வானவில்’ கவிதைத்தொகுதி போன்றவை அப்படி வெளிவந்தவை.

சில வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இத்தகைய தொகுதிகளை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கான அறிவித்தலை பத்திரிகை, வானொலிகள் மூலம் விடுத்திருந்தார். அதனடிப்படையில் நானும் எனது ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தேன். சிறுகதைகள் தெரிவு செய்யபட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு புத்தகமும் வரவிருப்பதாகச் சொல்லியிருந்தார்.

Friday 14 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்


யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

8. பொருத்தம் பார்த்தே அனுப்பினோம்

           
     ஆசிரியருக்கும், அவர் கற்பிக்கின்ற பாடத்துக்கும் பொருத்தம் பார்த்தே வகுப்பிற்கு அனுப்பவேண்டும். மனப் பொருத்தம் இல்லாத குடும்பத்தில் சச்சரவு வருவது போலவே, பாடப் பொருத்தம் இல்லாத ஆசிரியருக்கும் மாணவருக்கு மிடையில் வகுப்பில் சச்சரவு ஏற்பட்டதை அவதானித்திருக்கிறேன்.

ஆசிரியரின் மேன்மையான ஊழியத்தை மேலுயர்த்த உள்ள ஓரே வழி, அவருக்குப் பொருத்தமான பாடத்தை, பொருத்தமான வகுப்பிற்கு வழங்குவதாகும். எமது வெற்றியின் மந்திரத்தில் அதுவும் ஒன்று. விசேட பயிற்சி பெற்றவர்கள், பட்டதாரிகளைப் பொறுத்தவரை - அவர்கள் குறித்த பாடங்களை எடுக்கவேண்டும் என்பதே ஒழுங்கு. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி, ஒழுங்கு முறைக்கு இயைபு இல்லாத வகையில், செயலாற்ற வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன.

Monday 10 October 2016

கனவு மெய்ப்பட வேண்டும் - சிறுகதை


சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் உருண்டோடிவிட்டன. ஆனாலும் சற்குனம் கொழும்பைவிட பிற இடங்களில் இருந்த காலம்தான் அதிகம். பாகிஸ்தான் சிறைச்சாலையில் ஆறுமாதங்களும், ஜப்பான் ஹோட்டல்களில் மூன்றுமாதங்களுமாக காலத்தைக் கழித்துவிட்டு ‘பூமராங்’ போல புறப்பட்ட இடத்திற்கு வந்துவிட்டார்.

Friday 7 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

7. சமூகப் பணி
  
ஒரு கல்லூரியின் எழுச்சி மேன்மை முதன்மை என்பன முதற்கண் அதன் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. அதிபரின் முகாமைத்துவ-நிருவாகத் திறமை இரண்டாம் பட்சந்தான். அதிபர்தான் உதவியாசிரியர்களை முதலாம் பட்சமாகச் சிருஷ்டிக்க வேண்டியவர். சிருஷ்டிகர்த்தா பொய்த்தால், உதவி ஆசிரியர்கள் கல்லூரியை இரண்டாம் பட்சமாக்கிவிடுவர். அதன் மேலும் அவர்கள் கொண்டு செல்லத் தயங்கமாட்டார்கள். உழுகிற மாடானாலும், மௌனமாக ஏரைப் பிடித்துக் கொண்டிருந்தால், காலகதியில் படுக்கவும் தொடங்கிவிடும். அதிபர் மட்டும் ஒரு கல்லூரியை ஓஹோ என்ற நிலைக்கு அழைத்துச் செல்ல முடியாது.

Sunday 2 October 2016

கடைசி ஓட்டம் – சிறுகதை





தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.

அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது – மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை  எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன? அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட தர்முவிற்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

Saturday 1 October 2016

பொய் அன்பு போகும்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

தயாளினியும் பத்மாவும் பூங்காவில் பிள்ளைகள் விளையாடுவதை இரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பிள்ளை… பிரணவன் உச்சிக்குப் போகாதை. கவனம்” பத்மா சொல்வதற்குள் தீபன் அவனைத் தள்ளி விட்டான்.

தீபனின் தாயார் தயாளினியும் அதைப் பார்த்திருந்தார்.

பிரணவன் மறுபுறமுள்ள பற்றைக்குள் விழுந்தான். கால் முறிந்து வைத்தியசாலையில் படுத்திருந்தான்.

தள்ளியதைப் பிள்ளையும், பார்த்ததைத் தாயாரும் ஒருவருக்கும் சொல்லவில்லை.


“முற்பிறப்பிலை செய்த பாவத்திற்கு தண்டனை” வைத்தியசாலைக்கு வெளியே நின்ற தயாளினி யாருக்கோ சொல்வது பத்மாவிற்குக் கேட்டது.