tag:blogger.com,1999:blog-3971550851273451189.post4561579722202283268..comments2024-01-19T08:42:31.968+11:00Comments on சுருதி : விதியின் வழியே மதி செல்லும் - சிசு.நாகேந்திரன்K.S.Suthakarhttp://www.blogger.com/profile/17801492999794402633noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3971550851273451189.post-43087059298291396342018-03-18T23:09:17.547+11:002018-03-18T23:09:17.547+11:00விதிதான் மதியை செலுத்துகிறது என்பதை ஏற்கிறேன். நான...விதிதான் மதியை செலுத்துகிறது என்பதை ஏற்கிறேன். நான் ஏற்பது சரியா என்று தெளிய சரியான விளக்கங்கள் தேவை.<br />1) இயற்கை விதிகள் நிறைந்தது; இதை செய்தால் இது நடக்கும், இப்படி செய்தால் இப்படி விளைவுகள் இருக்கும், ஆக நாம் தெளிந்தறிந்தால் அல்லது நம் அனுபவத்தால் விதியை வெல்ல முடியாதா? "பிறப்பால் ஏழை என்பது என் தவறல்ல ஆனால் இறக்கும் போது ஏழை என்பது என் தவறு" என்பது போல், பிறப்பது என்பது விதியால் நிகழ்கிறது அதன் பின் நாம் விதியை வெல்ல முடியாதா?<br />2) நான் ஜோதிடத்தை நம்புகிறேன், ஜோதிடத்தில் எதிர்காலத்தை கூறமுடியும் அப்படியானால் நம் வாழ்க்கை முன்னரே முடிவு செய்யப்பட்டது தானே.... அப்படியெனில் இந்த வாழ்வில் நமது பங்களிப்பு என்ன?<br />3) முற்பிறவி வினை, கர்மா எல்லாம் நம்மை பாதிக்கிறது என்று சொல்கிறீர்கள், அப்படியானால் ஒரு பிறவியில் நாம் பாவம் அல்லது வினை செய்ய ஆரம்பித்திருப்போம் இல்லையா, அந்த பிறவியில் நாம் ஏன் பாவம் செய்தோம்? ஒரு பிறவியில் பாவம் செய்கிறோம் மறு பிறவியில் அதன் தண்டனையை பெறுகிறோம் என்பது உண்மையானால் நாம் ஏன் அல்லது எப்படி இந்த சுழற்சிக்குள் செல்கிறோம்?<br />4) (கருணை காட்டுபவர்,சிறிது சினத்துடன் கூறினார்...)4) கடவுள் இயற்க்கை போல சம நிலையானவர் அவருக்கு எந்த உணர்வும், உணர்ச்சிகளும் இருக்காது, அப்படி இருந்தால் அவர் கடவுள் கிடையாது. அழிக்கும் செயல் நடைபெற்றால்தான் ஆக்கம் நடைபெற முடியும், அழகாக படைக்கவும் வேண்டும் அதை அழிக்கவும் வேண்டும் அப்படியெனில் எந்த உணர்வுகளுக்கும் இடமே கிடையாது இறைவனிடம் ஆகவே தான் அனைத்திற்கும் ஒரு விதி உள்ளது. இவை கதைகள் என்றே நம்புவோமாக.ர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971550851273451189.post-78500597626766229322018-03-18T19:02:03.425+11:002018-03-18T19:02:03.425+11:00ஜெ வாழ்வை நினைத்து பார்க்கவும். அடித்த கொள்ளையும் ...ஜெ வாழ்வை நினைத்து பார்க்கவும். அடித்த கொள்ளையும் செய்த அநீதிகளும் என்ன செய்தது? சுகமாக சென்று விட்டார். இங்குள்ள மக்கள் இன்றும் அவதி. அதே போல் பல அரசியல்வாதி மற்றும் பலர். விதி என்று சொல்லி நியாய படுத்த முடியாது.Anonymousnoreply@blogger.com