Tuesday 5 February 2019

’மஞ்சு’ காத்திருப்புகளின் கதை.


 

1964 இல் எம்.டி.வாசுதேவன் நாயரால் எழுதப்பெற்ற இந்த மலையாள நாவல் அப்போது ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைக் கண்டது. தமிழில் பல மொழிபெயர்ப்புகளைக் கண்டபோதிலும், கடைசியாக 2017 இல் காலச்சுவடு பதிப்பாக ரீனா ஷாலினி அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ரீனா ஷாலினி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.

வாசுதேவன் நாயர் எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பலதுறைகளில் இயங்கியவர்

‘மஞ்சு’ என்றதும் என் மனதில் முதல் பதிவாகியது ஒரு பெண்ணின் கதை என்பதுதான். ஆனால் ‘மஞ்சு’ என்பது அந்தப்பெண்ணின் பெயர் அல்ல. தமிழில் ‘மஞ்சு’ என்பதற்கு பல அர்த்தங்கள் இருந்தபோதும் இங்கே ‘மூடுபனி’ என்பதே பொருத்தமாக அமைகின்றது.

Sunday 3 February 2019

சமநிலை குழம்பினால் சரித்திரம் அவுட்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

”ஐந்து வருடங்களில் வீட்டுக்கடனை அடைத்து விட்டேன்” நண்பன் சொன்னான்.

எப்படிச் சாத்தியமாயிற்று?

அவனும் மனைவியும் வாரம் முழுவதும் ஓய்வு ஒழிச்சலின்றி வேலை. உண்பதில் சிக்கனம். உறங்குவதில் ஒழுங்கின்மை. சுக துக்கங்களுக்கு போவது, பொழுதுபோக்கு கிடையாது.

ஒருநாள் நண்பன் சொன்னான்:

“என் மனைவிக்கு கான்சர். இன்னும் ஆறுமாதங்களே  இருப்பாள். எமக்கு ஒருவருமே இல்லை. யாராவது நண்பர்கள் வந்து பார்த்தால் மகிழ்ச்சி அடைவாள்.”

Friday 1 February 2019

கட்டுபொல் – நாவல் விமர்சனம்


 

இந்த நாவலின் ஆசிரியர் திருமதி பிரமிளா பிரதீபன், எனக்கு ஞானம் சஞ்சிகையின் மூலம் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர். ஞானம் சஞ்சிகை ‘புதிய தலைமுறைப் படைப்பாளிகள்’ என அறிமுகம் செய்த முதலாவது படைப்பாளி இவர். அப்போது இவர் பிரமிளா செல்வராஜா என அறியப்பட்டிருந்தார். பதுளை மாவட்டம் - ஊவா, கட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ’அறுபதுகளிலிருந்து ஐம்பது ஆண்டுகளின் பின்னர் மலையக இலக்கியத்தளத்தில் உருவாகிய ஒரேயொரு பெண் சிறுகதை எழுத்தாளர் இவர்’ என ஒரு வாசகனின் குறிப்புகள் பகுதியில் மு.சிவலிங்கம் பதிவுசெய்கின்றார். இவர் ‘பீலிக்கரை’, ‘பாக்குப்பட்டை’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைத் தந்திருக்கின்றார்.

இதுவரை காலமும் பெருந்தோட்டப் பயிர்களாக தேயிலை கோப்பி ரப்பர் கறுவா போன்றவற்றை அறிந்து வைத்திருந்தோம். ஏறத்தாள இருநூறு வருடங்களுக்கும் மேலாக இந்திய வம்சாவழித் தமிழர்கள் மலையகத்திலும், இலங்கையின் தென்கரையோரப் பிரதேசங்களிலும் இந்தப் பெருந்தோட்டங்களில் வேலை செய்து வருகின்றார்கள்.  அதனுடன் கடந்த அரைநூற்றாண்டு காலமாக இந்த கட்டுபொல் செய்கையும் சேர்ந்து கொள்கின்றது. ‘கட்டுபொல்’ என்பது ஒரு சிங்களச்சொல். அதன் நேரடி தமிழ் வடிவம் ‘முள் தேங்காய்’.