Friday 19 June 2020

‘பரீட்சை’ - சிறுகதை

விடிந்தால் பரீட்சை.

ஹிட்லர் போர்க்களம் போவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தான்? 16ஆம் உலூயி மன்னனின் 32வது மனைவி பெயர் என்ன? எலிசபெத் மகாராணியார் தனது 82வது பிறந்ததினக் கொண்டாட்டத்தின்போது என்ன கலர் மூக்குத்தி அணிந்திருந்தார்? – என்பவற்றையெல்லாம் நினைவுபடுத்துவதில் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.

இந்த நேரம் பார்த்து கோவிந்தர் ஹொஸ்பிட்டலில் போய் படுத்துக் கொண்டுவிட்டார். கோவிந்தர் சரவணனிற்கு மாமா. சரவணனின் அம்மாவின் தம்பி. ‘கோவிந்தராசு’ என்பது அவரது இயற்பெயர்.

‘இயற்பெயர் என்னவாயிருந்தென்ன! விடிஞ்சா கோவிந்தர் கோவிந்தாதான்’ என்று எதிர்வீட்டு விதானையார் ஊரெல்லாம் திக்விஜயம் மேற்கொண்டு புலம்பித் திரிகின்றார்.

Monday 15 June 2020

பிராப்தம் - சிறுகதை

முருகன் கோவில். பூசை முடிந்து உபயகாரர்கள் பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதைப் பெற்றுக் கொள்வதற்காக பக்தர்கள் வரிசையில் நிற்கின்றார்கள்.

தூரத்தில் அவர்களை நோக்கியபடி வெண்ணிற வேட்டி நஷனலில் பொன்னம்பலம். முதுமையின் தேடலில் காட்சி மங்கலாக, சந்தேகம் வலுக்கின்றது. அவர்களை நோக்கி விரைகின்றார். அண்மையாக நின்று நடப்பதை அவதானிக்கின்றார்.

வழக்கத்திற்கு மாறாக, புலம்பெயர்ந்த நாட்டில் பக்தர்கள் பிரசாதத்தை 'வெறுங்கை'யில் வாங்கிச் செல்வதைப் பார்க்க அவர் மனம் பொறுக்கவில்லை. கோவிலிற்குள் அமைந்திருந்த காரியாலயத்தை நோக்குகின்றார். காரியாலயம் இன்னமும் பூட்டப்படவில்லை.

Friday 12 June 2020

உறவுகளின் இடைவெளி


சனிக்கிழமை காலை பத்துமணி. சிவநாதன் ஓய்வாக கதிரையில் அமர்ந்திருக்கின்றார். அருகே ஃபான் ஒன்று மெல்பேர்ண் வெதருக்கு ஈடு கொடுக்கும் வகையில் சுற்றிச் சுழல்கிறது. மனைவி மலர் மகளை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். ரெலிபோன் ஓசை எழுப்பியது.

“ஹலோ... மலர் நிற்கின்றாவா?எதிர்ப்புறத்தில் ஒருபெண்குரல் தயங்கியபடியே கேட்டார்.

“இல்லை....!சிவநாதனும் தயங்கியபடியே பதில் சொன்னார்.

“எத்தனை மணிக்கு வருவா?

“மகளை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டா. இன்னும் இரண்டு மணித்தியாலத்திலை வந்திடுவா.

“ஆடி அமாவாசை விரதம் எப்ப வருகுது எண்டு கேட்போமெண்டு எடுத்தனான்.”

Monday 8 June 2020

நாமே நமக்கு... – சிறுகதை


நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு குளிர்காலத்தில் நானும் மனைவியும் மகனுமாகப் பிரயாணத்தை ஆரம்பித்தோம். அப்போது அய்ரோப்பாவில் கோடை காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பிரான்சில் எனது பாடசாலை நண்பன் குநேசன் இருக்கின்றான். பிரான்சை நான் முதலில் தெரிவு செய்தது, முதற்கோணல் முற்றும் கோணல் என்றாகிவிட்டது.

வாழ்வில் எத்தனையோ நாட்கள் வருகின்றன, போகின்றன. ஆனால் அன்றையநாள் ஒரு மறக்கமுடியாத நாள் ஆகிவிட்டது.

Monday 1 June 2020

அதுவும் இதுவும்


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

அம்மா எவ்வளவோ சொல்லியும் வசந்தன் கேட்கவில்லை. தான் விரும்பியபடி ஒரு பெண்ணைக் கூட்டி வந்தான்.

“அம்மா…. நான் இவளைத்தான் திருமணம் செய்யப் போறன்.”

“சரி. செய்!”

நாட்கள் நகர்ந்தன. வசந்தன் வேலையில்லாமல் அலைந்து திரிந்தான்.
இப்போது மூன்று பிள்ளைகள்.

“அம்மா…. என்ரை கடைக்குட்டிக்கு பிறந்தநாள் வருது. பேர்த்டே செய்யக் காசு வேணும்.”

”பிள்ளையைப் பெறுறது நீ, பேர்த்டே செய்யுறது நானா? அதுக்கு நீ, இதுக்கு நானா?” என்றார் அம்மா.