Sunday 30 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 12 - நீலக் கண் வீமன்

                  காலை பத்து மணி. வீட்டு மாடியில் அமிரின் அறையில் நின்ற கில்லாடி  மறைந்து மறைந்து யன்னல் திரைச் சீலை இடுக்கு வழியாக கீழே தோட்டத்தில் நின்ற நதியாவைப்  பார்த்தான். அவன் வாய் முணுமுணுத்தது: 'உவள் என்ன வானத்தைப் பார்த்து வரங்;கேட்கிறாள்? கொஞ்சக் காலமாக தோட்டப் பக்கமே காலடி வைக்காதவள், இப்போது என்ன நடந்தது? எப்போதும் தோட்டத்தில்தான் நிற்கிறாள். வீட்டு ஞாபகம் வந்திட்டுதோ?”

                பல் கிடுகிடுக்கின்ற குளிர். அதனையும் பொருட்படுத்தாமல் நதியா வீட்டுக் கோடிப்புறத் தோட்டத்தில் இருண்டுகிடந்த வானத்தைப் பார்த்து முறையிட்டாள்: 'ஐந்து நாட்களாகின்றன. அமிர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று மொட்டையாகச் சொல்கிறார்கள். ஏன் கைது செய்யப்பட்டார்? எங்கே கைது செய்யப்பட்டார்? யாருமே சொல்கிறார்கள் இல்லை. முருகா?” கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிய தோட்ட அந்தத்தில் உள்ள மேப்பிள் மரத்தைப் பார்த்தாள். அம்மரத்தின் வெற்றுக் கிளைகளில் அரும்பியிருந்த வசந்த காலக் குருத்துக்கள் அவளைப் பார்த்து நான்கு வாரங்களின் முன்னர் பூப்பெய்திய குமரைப் போல ஒன்றும் புரியாமல் விழித்தன.

                லிவர்பூலில் அமிர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அவனைப் பற்றிய தகவல் எதுவும் கில்லாடி குழுவில் எவருக்கும் தெரியாது. அவர்கள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது நதியாவுக்கு வெளிச்சமாகியது.      

Friday 28 August 2015

நள்ளிரவில் வந்த செய்தி - கதை



இராமநாதனாலை வந்த வினை உது!

குணம், அதாரது இராமநாதன்?

நான் சேர். பொன். இராமநாதனைப் பற்றிச் சொல்லுறன் மரியதாஸ்.

அதுதான் ஆரெண்டு கேக்கிறன் குணம்? ஆரந்தச் சேறும் பொன்னும்?

உனக்கு ஜி.ஜி.யைத் தெரியும்தானே! ஐம்பதுக்கு ஐம்பது கேட்டவர். உனக்கு ஒரு இழவும் தெரியாது போல கிடக்கு. நான் போய் உன்னோடை அரசியல் கதைக்கிறன்.

குணம், எனக்கு இப்ப பென்ஷன் கிடைச்சா காணும் எண்ட மாதிரி. எத்தினை தரம் அலையுறது உவங்களிட்டை. எங்கட நாடு கனடாவை விட பரவாயில்லைப் போல கிடக்கு. கொஞ்சம் கையுக்கை வைச்சா வெண்டிடலாம். இஞ்சை அதுவும் சரி வராது.

மரியதாஸ், இப்பதான் நானும் வந்திருக்கிறேனே! இனி இரண்டு பேருமா அலைவம். அது சரி உந்தக் கொட்டாஞ்சேனைப் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலைக் கட்டினது ஆரெண்டு தெரியுமே? இராமநாதன்ரை அப்பா பொன்னம்பலம்.

குணம், எனக்கென்னண்டா அரசியல்வாதியளையே தெரியாது. நீ  நல்ல ஆழமா அரசியல் கதைக்கிறாய். ஃபமிலி றீ பற்றியெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்.

Wednesday 26 August 2015

தடுத்தாட்கொள்ளல்



தினேஷின் பத்தாவது பிறந்தநாள். ஏறக்குறைய நூறுபேர் வருகையுடன் ஹோலில் கொண்டாடிக் கொண்டிருந்தான். ஹோலின் முன்பகுதியில் கேக் ஒரு மேசையில் சோடனைகள் புடைசூழ வைக்கப்பட்டிருந்தது. பின்புறத்தில் 'டின்னர்' தயாராகிக் கொண்டிருந்தது.

கேக் வெட்டும் நேரம். மங்களம் அக்கா தலையைச் சிலுப்பியவாறு ஹோலிற்குள் நுழைகின்றார். அவரின் நடைக்கேற்றவாறு கையிலுள்ள 'கான்ட் பாக்' அசைகின்றது. செங்கம்பளம் விரிக்காத தரை மீது சிருங்கார நடை நடந்து பின்புறம் போகின்றார். 'குச்சி' நறுமணம் அவரைப் பின் துரத்துகின்றது.

"சரவணன், ரேவதி எங்கே?" பதட்டமாக நின்றவர்களிடம் கேட்டார். அவர்கள் குசினிப்பக்கம் கையைக் காட்டினார்கள். சரவணன் மகனை ஒரு கையில் பிடித்தபடி, குசினிக்குள் பிஷியாகிப்போன ரேவதியை கேக் வெட்ட அழைத்துக் கொண்டிருந்தான்.
"நீங்கள் கோயில் காசு கட்டிவிட்டீர்களா?" ரேவதியை நோக்கி கேள்விக்கணை தொடுத்தார் மங்களம்.

Monday 24 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 11 - ஒரு கடா பலியாகிறது

                 கில்லாடியும் சூட்டியும் திரும்பி வந்தபொழுது நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டது. அமிரின் அறை பூட்டிக்கிடந்தது.

                அழைப்பு-மணியை விடாமல் தொடர்ந்து அடித்தும் கில்லாடியினால் அமிரின் தூக்கத்தைக் கலைக்க முடிய வில்லை. ஆத்திரம் கொதிக்க கதவில் படார் படாரெனக் குத்தினான். கோட்டான் சூட்டி தலையைச் சுழற்றி வேற்று மனிதன் யாராவது தங்களை வேவு பார்க்கிறார்களா என்று ஹோட்டலின் மூன்றாம் மாடியிலிருந்து ஒற்றைக் கண்ணால் நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த நித்திரையில் அயர்ந்துபோய் இருந்த  அமிர் திடுக்கிட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான்.

                “மடையா உன்னைக் கதவைப் பூட்டவேண்டாம் என்று சொன்னனான். ஏன்டா நாயே பூட்டினனீ?" என்ற கேட்டபடி கில்லாடி அமிரின் அறைக்குள் விரைந்தான். அதற்கு முன்னர் அவன் அமிரை என்றுமே அவ்வாறு வைததில்லை. கில்லாடி கக்கிய சுடு சொற்களை எதிர்கொள்ள முடியாத அமிர் குளியல் அறை வெள்ளைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து வெதும்பினான். கில்லாடியின பின்னே வந்த கோட்டான் சூட்டி, கில்லாடியின் ஜேம்ஸ்பொண்ட் பேக்கை அமிரின் கட்டிலின் கீழே மௌள அசுமாத்தம் இல்லாமல் தள்ளிவிட்டான்.

Saturday 22 August 2015

குசினிக்குள் ஒரு கூக்குரல் - கதை



வரன் மிகவும் பிரயாசை உள்ள மனிதர். ஒரு டொலரேனும் வீணாகச் செலவழிக்க மாட்டார். வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு குசினிக்குள் சென்றார். அப்பொழுதுதான் மனைவி வாணி 'ஷொப்பிங்' முடித்து வந்திருந்தாள். வாங்கி வந்த பொருட்களை அடுக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
"பில்லை ஒருக்கால் தாரும் பார்ப்பம்!"
"சரி... இனி அக்கவுண்டன் வந்திட்டார்."

வரன் பில்லைப் பார்த்தார். முகம் அஸ்ட திக்கிற்கு கோணலாகியது.

Wednesday 19 August 2015

இராஜகாந்தன் கவிதைகள் – 8



மறுபக்கம்

ஸ்ரீதனம் என்றதும் சீறிப்பாய்கிறார்கள்
பத்திரிகையிலும் வானொலியிலும்.
ஆண்களுங்கூட பெண்களுக்காக
அழகாய் வக்காலத்து வாங்குறார்கள்.
அரசியல் தலைவர்கள் போல்
அடுக்கு மொழியில் அநியாய பழிகள்
அத்தனையும் ஆண்வர்கத்தின் மேல்தான்.

Monday 17 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 10 - நரவாச  மல்லிகை  மாளிகை
                  தனது புதிய சிகப்பு டீஆறு காரின் சாரதி ஆசனத்தில் கோட்டான் சூட்டி. அவனின் ஒற்றை வலக் கண் - புற்றுக்குள்ளால் வெளியே வரும் வெள்ளெலியைப் வேட்டையாட தருணம் பார்த்திருக்கும் கூகையின் கண்களைப் போல - கில்லாடியின் வீட்டிலிருந்து அமிர் எப்போது வருவான் என்று குறிவைத்துக் கொண்டு இருந்தன. வீட்டுக்கு வெளியே வந்த அமிர் வாசலில் கோட்டான் சூட்டி காரில் இருப்பதைக் கண்டான். அவனது காருக்கு அண்மையில் சென்று,
சூட்டி அண்ணை எப்படிச் சுகம்?"
நல்ல சுகம். உன்பாடு எப்படி?"
நானும் நல்ல சுகம்."
ஆளைப் பார்த்தாலே தெரிகிறதே. நதியாவின் சாப்பாட்டில் ஒரு சுற்றுப் பருத்திருக்கிறாய்" என்று கூறிவிட்டு ஒரு பொய்ச் சிரிப்பை உதறினான். அவன் அதனைப் பொருட்படுத்தாமல்,
எங்கே அண்ணை காலமை நேரத்தோடு புறப்பட்டு விட்டீங்கள்?"
லிவர்பூலுக்கு. தம்பி அமிர், உனக்குத் தெரியுமே எங்கே லிவர்பூல் நகரம் இருக்கிறது என்று?"
ஓ. நல்லாகத் தெரியும். தூரப் போகவேண்டும். இங்கிலாந்தின் மேற்குக் கடற்கரையில். மேர்சி நதி முகத்துவாரத்தில்."
வந்து ஏழு மாதம். அதற்கிடையிலே நீ இதெல்லாம் பிடித்திட்டாய்."
உது மட்டுமில்லை அண்ணை. எனக்கு லிவர்பூல் சரித்திரமே தெரியும்."
அதென்னடா தம்பி சரித்திரம்? சொல்லு பார்க்கலாம்."
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய துறைமுகம் லிவர்பூல். 18ஆம் நூற்றாண்டு தெரியுமே அண்ணை? அப்போது அங்கே கறுப்பர் அடிமை வணிகம் சுறுசுறுப்பாக நடந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைக் காலப் பகுதிவரை புடவைக் கைத்தொழிலில் கொடிகட்டிப் பறந்தது. றொக் சங்கீதம் கேள்விப்பட்டனீங்களே?"
ஓ."
அதுகூட 1959லே லிவர்பூலிலேதான் தொடங்கினது."
கோட்டான் சூட்டி மனதுள் கறுவினான்: 'உந்த படித்த நாய்க் கூட்டத்திற்கு எங்களுக்கு ஒன்றும் தெரியாதென்ற தடிப்பு. உவருக்கு இன்றைக்கு இரவைக்குச் சிலவேளை தெரியவந்தாலும் வரும் எங்கள் படிப்பைப்பற்றி.

Friday 14 August 2015

கோயிலும் சங்கமும் - குறும்கதை


நாட்டிற்குப் புதிதாக வந்து நண்பர் செந்தி வீட்டில் ஒரு மாதம் குதூகலமாக இருந்தோம். வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு போகும் போது, "எங்களுக்குக் கிட்ட பத்து நிமிஷம் கார் ஓடும் தூரத்தில் ஒரு கோயில் இருக்கு" என்று நண்பர் சொன்னார். முதலிலேயே சொன்னால் எங்களை அங்கே கூட்டிக் கொண்டு போக வேண்டி வரலாம் என நினைத்து அவர் இதை எங்களுக்குச் சொல்லவில்லை.

நண்பர் கோயிலுக்கு எல்லாம் போவதில்லை. நண்பரின் குடும்பத்திற்கும் கரப்பான் பூச்சிக்கும் ஏதோ ஒரு வகையில் பூர்வ ஜென்மத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். கரப்பான் பூச்சிகள் வெளிச்சத்தைக் கண்டு பதகளித்து ஓடுவது போல, அவர்களும் மனிதர்களைக் கண்டு பதட்டப்பட்டு ஓட்டமெடுக்கின்றார்கள். கடைகளுக்குப் போய் வருவது என்றால் கூட ஒரு 'ஒட் ரைமில்'தான் போய் வருகின்றார்கள். அதுவும் சுவர்க்கரையோரமாக பதுங்கிப் பதுங்கியே போய் வருகின்றார்கள்.

Wednesday 12 August 2015

ஒண்ணுமே புரியல உலகத்தில!



'சுப்பர் மார்க்கெட்'டின் 'டெலி' (Deli) பகுதியினுள் ஏழெட்டுப் பேர் வரிசையில் நிற்கின்றார்கள். அங்கு பொருட்களை வாங்குவதற்காக 'நம்பர் சிஸ்டம்' நடைமுறையில் இருந்தது. 'பைஃவ்' (five) என்று கத்தினாள் 'கவுண்டரில்' நின்ற ஒரு  வெள்ளை இனப்பெண். ஒரு வயது முதிர்ந்த பெண் மெதுவாக நகர்ந்து அவளிடம் சென்றாள். 'நம்பர் துண்டை' வாங்கி வைத்துவிட்டு அவள் கேட்டதை எடுத்து நிறுத்து விலையும் குறித்து அவளை அனுப்பினாள்.

வரிசையில் அடுத்தது ஒரு கறுப்பு உருவம். நம்மவர்தான். கையில் பிள்ளையைச் சுமந்தபடி அவன் நிற்கின்றான். அவனுக்குப் பின்புறமாக வெள்ளை வெளேரென ஒரு ஐரிஷ் நாட்டுப்பெண். வெள்ளையும் கறுப்பும் அருகருகே நிற்கும்போது, அவை தமக்கேயுரித்தான தனித்தன்மையுடன் துலங்குவதைக் காணக்கூடியதாக இருந்தது.

Monday 10 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 9 - அராஜகத்தின்  கொடுமுடி
           
எனது அத்தியந்த சிநேகிதி நர்த்தனாகூட என்னை ஒத்த குடி இல்லை"
என்று லண்டன் வந்த முதல் தினம் அமிர் கூறிய வார்த்தைகள் ஆறு மாதங்களாக ஜீவிதாவை நச்சரித்துக்கொண்டு இருந்தன. ஒருவேளை அந்த நர்த்தனா அமிரின் இதயத்தை இன்னும் அமுக்கி வைத்திருக்கிறாளோ இல்லையோ என்பதை நிட்சயப் படுத்தும் நோக்கத்தோடு அவனைப் பிளெசற் பூங்காவிற்கு வரச்சொல்லி யிருந்தாள்.

                “பத்து மணிக்குப் பிளெசற் பூங்காவில் காத்து நிற்பேன். மறந்துபோய் லைபிரரிக்குப்போய்விடாதீர்கள்" என்று முதல் நாள் ஜீவிதா சொன்னபடி குறித்த நேரத்துக்கு அமிர் அங்கு சென்றுவிட்டான். ரெனிஸ் மைதானத்துக்கு முன்னே உள்ள மேப்பிள் மரத்தின் கீழே காணப்பட்ட சலாகையடித்த பச்சை மரவாங்கில் அவளைக் காணததால், அமிருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அமிரின் உள்ளத்தை ஜீவிதாவின் பொன் வண்ணச் சித்திரம் ஓயாமல் ஊஞ்சலாட்ட, அவள்மீது உள்ள தனது விருப்பத்தைத் தெருவிப்பது முறையோ அல்லவோ என்ற கலவரத்துள் சிக்கியிருந்த அவன் தலைமுடியைக் கோதியபடி வாங்கில் அமர்ந்தான். 
                அதே சமயம் ஏறக்குறைய நூறு மீற்றருக்கு அப்பால் பூங்காவின் மையத்தில் உள்ள தேநீர்ச்சாலை மறைவில் ஜீவிதா நிற்பது அமிரின் கண்களில் படவில்லை. கறுப்பு உடை அணிந்த ஒல்லி நெடுவல் ஒருவன் அவளுக்கு கையசைத்து விடைபெற்று அவ்விடத்தைவிட்டு விரைந்து நகர்ந்து தெற்குப் பக்க வாயிலால் வெளியேறியதையும் அமிர் கவனித்திருக்க முடியாது.

Friday 7 August 2015

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

தொகுப்பில் உள்ள சிறுகதைகளை முன்னிட்டு எழுத்தாளர்கள் / வாசகர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள்

விளக்கின் இருள்
நவீன உலகம் சுயநலமாக மாறிவிட்டதையும், நவீன மனிதன் அதிலும் அதிக சுயநலமிக்கவனாக வாழ்ந்து வருவதையும், ஒரு நவீன நகரப் பின்னணியில் விவரிக்கும் கதை. பிரச்சாரம் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும், எவ்விடத்திலும் அதன் நெடி அடிக்காமல் மனதின் அடிவாரத்தில் கூரான ஊசிகளைச் சொருகிச் செல்கிறது. ஒரு நகரின் பெருந்துயரை இதைவிட அழுத்தமாகச் சொல்லிவிட முடியாது என்ற எண்ணம் வருகிறது இறுதியில்.
இது ஒரு மிகத் தேர்ந்த கதை சொல்லியின் கதை  
-  பாலு மணிமாறன்,  சிங்கப்பூர், ஜனவரி 2014.

கங்காருப் பாய்ச்சல்கள் (5)

எதுக்கும் ஒரு கணக்கு இருக்க வேண்டும்!

சைக்கிள் உதிரிப்பாகங்களைப் பிரித்துவிட்டு, மீண்டும் அந்தச் சைக்கிளைப் பூட்டும்போது ஒன்றுமே எஞ்சக்கூடாது என்பார்கள்.

ஒருமுறை நான் கொழும்பில் தங்கியிருந்தபோது, அந்தவீட்டுக்காரர் தன்னுடைய மகனைக் காலையிலிருந்து தேடிக்கொண்டிருந்தார். மகன் அப்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி மகன் வந்துவிட்டானா என்று தேடிக்கொண்டிருந்தார்.

“ஏதாவது அவசரமா?என்று கேட்டேன்.

“அப்படியொன்றுமில்லைஎன்றார்.

அவரது கணக்குவழக்குகளை மகன் தான் எழுதி வைத்திருப்பான். மாலை மகன் வந்தபோது அவர் குட்டித்தூக்கம் போட்டுவிட்டார். விழிக்கும்மட்டும் காத்திருந்தான் மகன்.

“அப்பா... என்னை அவசரமாகத் தேடினீர்களாம்!

Thursday 6 August 2015

வன்னியாச்சி - சிறுகதைத் தொகுப்பு

 தாமரைச்செல்வி -  இலங்கையின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய இவர் 1973 இல் இருந்து எழுதி வருகின்றார். தேசிய சாகித்திய விருது, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது போன்றவற்றைப் பெற்றவர். சுமைகள், விண்ணில் அல்ல விடிவெள்ளி, தாகம், வேள்வித் தீ, வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு என்ற நாவல்களையும் ஒரு மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை போன்ற சிறுகதைத்தொகுப்புகளையும் தந்துள்ளார்.

இவரது 'அழுவதற்கு நேரமில்லை' சிறுகதைத் தொகுதி 1995 இல் ஏற்பட்ட வடபுலப்பெயர்வின் தாக்கம் பற்றி எழுதப்பட்ட சிறப்பான ஒரு தொகுதி. வன்னிக்கான இந்தப் புலப்பெயர்வில் மக்கள் படும் வேதனைகள், போரின் அவலங்கள், அகதிப் பிரச்சினை என்பன பற்றிக் கூறப்பட்டிருந்தன.

Monday 3 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 8 - 
திசை மாறும் குருவி





                சால்வை மூத்தானுக்கு நதியாவின் நடத்தைமீது சந்தேகம் எரிச்சல் பொறாமை. கில்லாடி வீட்டில் இல்லாத வேளைகளில் அவள் அமிருக்குச் செய்யும் இராசமரியாதையும், அவனோடு ஒட்டி நின்று சல்லாபம் செய்யும் நளினமும் பாங்கும் அவனின் உள்ளத்துக்கு உருப்போட்டது.

                “எனக்குத் தேநீர் வேண்டாம். சொலிசிற்றர் கந்தோருக்குப் போய் ஜீவிதாவை அவசரமாகச் சந்திக்க வேண்டும்" என்று அமிர் நதியாவுக்குக் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியதைத் தனது முதல்மாடி அறைக் கதவிடுக்கின் ஊடாக மறைந்திருந்து அவதானித்த மூத்தான், வெளியே சென்ற அமிர் வருகிறநேரத்தை எதிர்பார்த்து வரவேற்பறையில் இருந்து ரி.வியில் தமிழ்ப் படம் பார்ப்பது போலப் பாசாங்கு செய்தான் - அவன் வந்ததும் சின்ன வடிவு நதியா என்ன செய்கிறாள் என்பதை வேவு பார்க்கும் உள்நோக்கத்தோடு.

Saturday 1 August 2015

விருந்து - சிறுகதை




அட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்?

ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு. எப்பிடி உன்ரை பாடுகள் போகுது? நீ வெளிக்கிட்டு ஒரு பத்துப் பதின்மூண்டு வருஷம் இருக்கும் என்ன?

பரவாயில்லை சாந்தன். இப்ப நாங்கள் டிலகேயிலைஇருக்கிறம். நீங்கள்?

நாங்கள் அல்ற்ரோனாவிலை.

அப்ப கிட்டத்தான். என்ன ஒரு பிள்ளையோடை நிப்பாட்டிப் போட்டியள் போல.

உம். ஒண்டு காணும். இந்த லவற்ரன் மாக்கெற்றிலைஎல்லாம் மலிவு எண்டிச்சினம் குமரன். ஆனா வந்து பாத்தாத்தான் தெரியுது. பழைய இரும்புச் சாமானுகளும், படு குப்பை விலையும். அவிச்ச சோளன் ஒண்டு ஐஞ்சு டொலர் சொல்லுறான்.