அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையின் குரல் வடிவம் (2025)
சுருதி
Friday, 11 July 2025
Tuesday, 8 July 2025
கதை சுப்பர் - குறுங்கதை
சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார்.
“என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறா. உங்கட புத்தகத்தையும் ஒருக்காத் தாங்கோ. வாசிக்கக் குடுப்பம்.”
“அம்மாவுக்கு என்ன வயசாகின்றது?”
“எண்பத்தைஞ்சைத் தாண்டிவிட்டா…”
“நல்லது. இந்த வயசிலையும் நல்ல சுறுசுறுப்பா இருக்கிறா. குடுங்கோ வாசிக்கட்டும்.”
சில வாரங்கள் கழிந்திருக்கும். கமலாக்கா எனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென மனைவி தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.
“கமலாக்காவின்ரை அம்மா… உங்களோடை கதைக்க வேணுமாம்.”
“தம்பீ… உம்முடைய கதைப்புத்தகம் அற்புதம். முதலாவது கதையை ஏழெட்டுத் தரம் வாசிச்சுப் போட்டன்.”
என் மனதிற்குள் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு கதையை ஒரு தடவை வாசிக்கவே பலரும் தயங்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு பெண்மணியா?
”ஏன் அம்மா… அவ்வளவு நல்லாவா இருக்கு.”
“அப்பிடியில்லைத் தம்பி… சுருட்டி வைச்ச பாயை விரிக்கிற மாதிரி இப்ப என்ரை நிலைமை இருக்கு…” எனக்கு அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அவரே விளக்கம் தந்தார்.
“இல்லை தம்பி… ஒரு பக்கமாக வாசிச்சுக்கொண்டு போக, மற்றப்பக்கமா மறந்து போகுது… இன்னுமொரு நாலைஞ்சு தரத்திலை முடிச்சுப் போடுவன் தம்பி…”
“அதுதான் நல்லது அம்மா... விடாமல் தொடர்ந்து வாசியுங்கோ” என்று நான் அவரை உற்சாகமூட்டினேன்.
சில பேர் தலையணை சைசில் புத்தகம் போட்டு உறங்கக் கொடுக்கின்றார்கள். நான், ஒருவர் ஆயுள் உள்ளவரை படிப்பதற்கு ஒரு புத்தகம் குடுத்திருக்கின்றேன்.
`நீங்கள் நிறையப் புத்தகங்கள் படிப்பதாக உங்கள் மகள் சொன்னாரே… இப்படித்தான் அந்தப் புத்தகங்களையும் படிக்கின்றீர்களா?’ என்ற கேள்வி, தொலைபேசி என் மனைவியின் கைக்கு மாறியபின்னர் தான் என் மூளைக்குள் வந்தது. அவருக்கு எண்பத்தைஞ்சில் கிடைத்த பாய் விரிக்கும் தொழில், எனக்கு அறுபதில் கிடைத்திருக்கின்றது.
“அம்மாவுக்கு என்ன வயசாகின்றது?”
“எண்பத்தைஞ்சைத் தாண்டிவிட்டா…”
“நல்லது. இந்த வயசிலையும் நல்ல சுறுசுறுப்பா இருக்கிறா. குடுங்கோ வாசிக்கட்டும்.”
சில வாரங்கள் கழிந்திருக்கும். கமலாக்கா எனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென மனைவி தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.
“கமலாக்காவின்ரை அம்மா… உங்களோடை கதைக்க வேணுமாம்.”
“தம்பீ… உம்முடைய கதைப்புத்தகம் அற்புதம். முதலாவது கதையை ஏழெட்டுத் தரம் வாசிச்சுப் போட்டன்.”
என் மனதிற்குள் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு கதையை ஒரு தடவை வாசிக்கவே பலரும் தயங்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு பெண்மணியா?
”ஏன் அம்மா… அவ்வளவு நல்லாவா இருக்கு.”
“அப்பிடியில்லைத் தம்பி… சுருட்டி வைச்ச பாயை விரிக்கிற மாதிரி இப்ப என்ரை நிலைமை இருக்கு…” எனக்கு அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அவரே விளக்கம் தந்தார்.
“இல்லை தம்பி… ஒரு பக்கமாக வாசிச்சுக்கொண்டு போக, மற்றப்பக்கமா மறந்து போகுது… இன்னுமொரு நாலைஞ்சு தரத்திலை முடிச்சுப் போடுவன் தம்பி…”
“அதுதான் நல்லது அம்மா... விடாமல் தொடர்ந்து வாசியுங்கோ” என்று நான் அவரை உற்சாகமூட்டினேன்.
சில பேர் தலையணை சைசில் புத்தகம் போட்டு உறங்கக் கொடுக்கின்றார்கள். நான், ஒருவர் ஆயுள் உள்ளவரை படிப்பதற்கு ஒரு புத்தகம் குடுத்திருக்கின்றேன்.
`நீங்கள் நிறையப் புத்தகங்கள் படிப்பதாக உங்கள் மகள் சொன்னாரே… இப்படித்தான் அந்தப் புத்தகங்களையும் படிக்கின்றீர்களா?’ என்ற கேள்வி, தொலைபேசி என் மனைவியின் கைக்கு மாறியபின்னர் தான் என் மூளைக்குள் வந்தது. அவருக்கு எண்பத்தைஞ்சில் கிடைத்த பாய் விரிக்கும் தொழில், எனக்கு அறுபதில் கிடைத்திருக்கின்றது.
Thursday, 3 July 2025
அமரர் மு. பாலசுப்பிரமணியம் நினைவு சிறுகதைப்போட்டி - 2025 முடிவுகள் (புகலிடம்)
சிறுகதைப் போட்டி - புகலிடம்
01. வேடம் தாங்கல் - கே.எஸ். சுதாகர் - அவுஸ்ரேலியா
02. அதிர்ஸ்டக்காரரா? - ஸ்ரீரஞ்சனி- கனடா
03. தங்கமலர் - நவமகன் - நோர்வே
04. பட்டுக்கிளி- டானியல் ஜெயந்தன் - பிரான்ஸ்
05. கவிதைகளும் கருங்குழிகளும் - பொ.கருணாகரமூர்த்தி - ஜேர்மனி
06. பனித்துகள் - பவானி - நெதர்லாந்து
07. மரணம் - கௌசி -ஜேர்மனி
08. தரமான சம்பவமொன்று- பிரான்சிஸ் அமலதாஸ் - பிரான்ஸ்
01. வேடம் தாங்கல் - கே.எஸ். சுதாகர் - அவுஸ்ரேலியா
02. அதிர்ஸ்டக்காரரா? - ஸ்ரீரஞ்சனி- கனடா
03. தங்கமலர் - நவமகன் - நோர்வே
04. பட்டுக்கிளி- டானியல் ஜெயந்தன் - பிரான்ஸ்
05. கவிதைகளும் கருங்குழிகளும் - பொ.கருணாகரமூர்த்தி - ஜேர்மனி
06. பனித்துகள் - பவானி - நெதர்லாந்து
07. மரணம் - கௌசி -ஜேர்மனி
08. தரமான சம்பவமொன்று- பிரான்சிஸ் அமலதாஸ் - பிரான்ஸ்
Friday, 27 June 2025
மீன் குஞ்சுகள் - எனக்குப் பிடித்த கதை

ச.முருகானந்தன்
வானத் திரையில் சூரியனின் ஒளித்தடம் துவங்கத் தொடங்கிவிட்டது. பீடி ஒன்றைப் பற்ற வைத்தபடி கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சீனித்தம்பி. மார்கழி மாதப் பனிக்குளிரில் அவனது உடம்பு வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது. கடற்கரையில் அவனது சக தொழிலாளர்களான மார்க்கண்டுவும் வீரசொக்கனும் நின்றிருந்தார்கள். அவனைக் கண்டதும் புலனசைத்தார்கள். இந்தச் சில வாரங்களும் தொழில் இல்லாததால் வள்ளங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் சோளகம் பிறந்துவிடும்; தொழிலும் தொடங்கிவிடும்.
நண்பர்கள் மூவரும் கடலில் இறங்கிக் கணுக்காலளவு நீரில் நின்றபடி சோளகம் பிறக்கப் போவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதைப்பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அலைகள் மெதுவாக வந்து போய்க் கொண்டிருந்தன.
“சோளகம் பிறக்கும் பொழுது அடுத்த பருவத்தோட தாமெல்லாம் கடலுக்குப் போகலாம் போலிருக்கே” என்று குதூகலத்துடன் கூறினான் மார்க்கண்டு. உண்மை தான். சோளகம் பிறந்துவிட்டால் அந்தச் கடலோரப் பிரதேச மீனவ மக்கள் மத்தியில் எத்தனை குதூகலம். வாழ்க்கையில் வசந்தம் வருவது போன்ற மகிழ்ச்சிச் கரையிலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள் எல்லாம் கடலில் ஓடத் தொடங்கிவிடும். மீனவப் பெண்கன் குழந்தைகளுக்குக் கூட சிறுசிறு தொழில்கள் கிடைத்து விடும். பிற இடத்து மீன் முதலாளிகள்கூட அங்கே படையெடுத்து வரத் தொடங்கி விடுவார்கள்.
Subscribe to:
Posts (Atom)