Friday 20 September 2019

எப்படிப் போனீர்கள்? – சிறுகதை


அது என்ன மாயமோ தெரியவில்லை. விளையாட்டு தொடங்கிய நேரம் முதல், பந்து அவுஸ்திரேலியா அணியினருடன் கூடச் சென்றுகொண்டிருந்தது. சக்கர நாற்காலியின் இரண்டுபக்கச்சில்லுகளையும் தம் கைகளால் உந்தித் தள்ளி சமநிலையுடன் உறுதி தளராமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கப்டன் பந்தைச் சுழன்று சுழன்று பிடித்து, லாவகமாகக் கூடைக்குள் எறிந்தபடி இருந்தார். விளையாட்டு முடிய இரண்டுநிமிட அவகாசம் இருக்கையில் இறுதிப்பந்தை கூடைக்குள் போட்டு விளையாட்டை முடிவிற்குக் கொண்டு வந்தார் கப்டன். கரகோஷ ஒலி வானைப் பிழந்து எங்கும் எதிரொலித்தது.

பரா ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட அணியின் அவுஸ்திரேலியாக் குழுவிற்கு தமது நிறத்தில் இருந்த ஒருவர் தலைமை தாங்குவதையிட்டு ஆசிய நாட்டவர்கள் பெருமிதம் கொண்டார்கள். தமது நாட்டினரின் குழு வெற்றிபெறவில்லை என்பதையும் அக்கணத்தில் மறந்து, ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியை அவுஸ்திரேலியா அணியிருக்கு வெளிக்காட்டினார்கள். சக்கரநாற்காலியுடன் மைதானத்திற்குள் வட்டமிட்டபடி, முகமெல்லாம் பல்லாக தனது கரங்களை உயர்த்தி வேகவேகமாக ஆட்டினார் கப்டன். கப்டனைத் தவிர குழுவில் இருந்த ஏனைய பதினொரு விளையாட்டுவீரர்களும் வெள்ளையினத்தவராக இருந்தார்கள்.

Wednesday 11 September 2019

கதைகளில் உத்திகள்


கதைகளில் உத்திகளைக் கொண்ட சிறுகதைத்தொகுப்புகள் என்று பார்க்கும்போது, எஸ்.பொ இன் `வீ’ தொகுப்பும், கதிர்.பாலசுந்தரத்தின் `அந்நிய விருந்தாளி’ தொகுப்பும் நினைவுக்கு வருகின்றன. மேலும் பல தொகுப்புகள் இருக்கலாம். இத்தொகுப்புகளில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உத்திகளைக் கொண்டு எழுதப்பட்டவை.

இந்தப் பதிவு கதிர்.பாலசுந்தரம் எழுதிய `அந்நிய விருந்தாளி’ பற்றியது. இத்தொகுப்பில் 1970களில் எழுதிய 8 கதைகளும், 1980களில் எழுதிய 2 கதைகளும் அடங்கியுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிரித்திரன், றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தவை. இதில் வரும் பத்துக் கதைகளும் பத்துவிதமான உத்திகளில் அமைந்திருப்பதைக் காணலாம்.

Monday 2 September 2019

நேர்காணல் : எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் / சந்திப்பு : குரு அரவிந்தன்



குரு அரவிந்தன்: வணக்கம் கே. எஸ். சுதாகர்,

அவுஸ்ரேலியாவில் இருந்து கனடா வந்திருக்கிறீர்கள். தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஏதாவது இலக்கியச் சந்திப்புக்களை இங்கே ஏற்படுத்தி இருக்கிறீர்களா?



கே.எஸ்.சுதாகர் : நண்பர்கள் வ.ந.கிரிதரன், பாலமுரளி (கடல்புத்திரன்), எல்லாளன் ராஜசிங்கம், தேவகாந்தன் என்பவர்களை கிரிதரனின் முயற்சியால் சந்தித்தேன். மற்றும் மூத்த எழுத்தாளர் கதிர்.பாலசுந்தரம், `வெற்றிமணி’ ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் (ஜேர்மனி), இன்று தங்களையும் சந்தித்திருக்கின்றேன். ரொறன்ரோவில் பலரும் இருந்ததனால், போக்குவரத்து காரணமாக பிறம்ரனில் தங்கியிருந்த என்னால் சந்திக்க முடியவில்லை. பலரைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தும் முடியவில்லை. தொலைபேசி மூலம் நண்பர் அகில் நீண்ட நேரம் என்னுடன் உரையாடியிருந்தார்.


குரு அரவிந்தன்: அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள், இதழ்களின்; பெயர்களைக் குறிப்பிட முடியுமா?


கே.எஸ்.சுதாகர் : மெல்பேர்ணில் இருந்து `எதிரொலி’ என்ற பத்திரிகை, `அக்கினிக்குஞ்சு’ என்ற இணையமும் வெளிவருகின்றன. அதேபோல் சிட்னியில் இருந்து ‘உதயசூரியன்’, `தமிழ் ஓசை’, `தென்றல்’ என்ற சஞ்சிகைகளும், `தமிழ்முரசு’ என்ற இணையமும் வெளிவருகின்றன.

Sunday 1 September 2019

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி - 2019



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - தேனி மாவட்டம் நடத்தும்

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி