Sunday 3 February 2019

சமநிலை குழம்பினால் சரித்திரம் அவுட்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

”ஐந்து வருடங்களில் வீட்டுக்கடனை அடைத்து விட்டேன்” நண்பன் சொன்னான்.

எப்படிச் சாத்தியமாயிற்று?

அவனும் மனைவியும் வாரம் முழுவதும் ஓய்வு ஒழிச்சலின்றி வேலை. உண்பதில் சிக்கனம். உறங்குவதில் ஒழுங்கின்மை. சுக துக்கங்களுக்கு போவது, பொழுதுபோக்கு கிடையாது.

ஒருநாள் நண்பன் சொன்னான்:

“என் மனைவிக்கு கான்சர். இன்னும் ஆறுமாதங்களே  இருப்பாள். எமக்கு ஒருவருமே இல்லை. யாராவது நண்பர்கள் வந்து பார்த்தால் மகிழ்ச்சி அடைவாள்.”

No comments:

Post a Comment