Thursday 1 September 2016

புறமோஷன்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

கோகுலனும் தீபனும் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஒன்றாக ஒரே பாடசாலையில் பிறைமரியில் சேர்ந்தார்கள். 

சேர்ந்த சிறிது காலத்தில் கோகுலன் உட்பட நான்கு மாணவர்கள் வகுப்பேற்றப்பட்டார்கள்.

தீபனின் அம்மா, தனது மகனையும் வகுப்பேற்றும்படி ஆசிரியரிடம் கெஞ்சினார்.

“நன்றாகப் படிக்கக் கூடியவர்களை மாத்திரம் வகுப்பேற்றினோம்”  ஆசிரியர் மறுத்துவிட்டார்.

இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள். தயவு செய்து தீபனையும் வகுப்பேற்றுங்கள், இல்லாவிட்டால் கோகுலனை வகுப்பு இறக்கி விடுங்கள்

ஆசிரியர் திகைத்துப் போனார்.

No comments:

Post a Comment