Saturday, 9 January 2016

அஞ்சலி நினைவுப்பகிர்வு


           அமரர் திருமதி அருண் விஜயராணி

                   அஞ்சலி நினைவுப்பகிர்வு

கடந்த  13-12-2015 ஆம் திகதி அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் நினைவாக நடைபெறும் அஞ்சலி நிகழ்வு  -  நினவுப்பகிர்வு 

நடைபெறும் இடம்:PRESTON CITY HALL
 (284, Gower Street, Preston, Victoria - 3072, Australia)


காலம்: 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை


மாலை 4.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரையில்.

தங்கள் வரவை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-
திரு. அருணகிரி ( கணவர் )     0416 25 5363

arun16354@gmail.com

Friday, 8 January 2016

கதையும் கடிதமும்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 7

செல்வா மீது அவனது மாமா மாமி கடும் கோபம் கொண்டிருந்தார்கள்.

செல்வா தனது சிறுகதை ஒன்றில் மாமனராப் பற்றி தரக் குறைவாக எழுதியதே அதற்குக் காரணம். அதற்கு மாமனார் தனது எதிர்ப்பை இப்படித் தெரிவித்தார்.


| தம்பிக்கு என்னைப் பற்றித் தெரியேல்லை. என்ரை மகளைப் பற்றி ஒரு கடிதம் உவருக்குப் போட்டன் எண்டால், உவற்ரை குடும்பம் பிரியும்.|

Tuesday, 5 January 2016

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 6

நீங்கள்தான் கட்லட் செய்து வருவதாக எல்லாருக்கும் சொல்லி இருக்கின்றேன். வரும்போது 50 கட்லட்டுகளுடன் வாருங்கள்.

பிறந்தநாள் விருந்து தொடங்கியது.

பிளேற் ஒன்றிற்குள் பலகாரங்களைப் போட்டுக் கொடுத்தார்கள். கட்லட்டைக் கடித்த போது கசந்தது.

நண்பியைக் கூப்பிட்டேன். நாங்கள் கொண்டு வந்த கட்லட் எங்கே?

அதுஎங்களுக்கு. நான் வேலை செய்யும் இடத்திற்கு கொண்டு போகப் போகின்றேன். ‘இது’  நான் செய்தது. உங்களுக்கு!

வேலை செய்யும் இடத்தில் அவருக்குப் புகழ். இங்கே எனக்கு?



Friday, 1 January 2016

ஏன் வரவில்லை?




50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 5

சதாசிவம், மகன் சதீஷின் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை அனுப்பிக் கொண்டிருந்தார். முகவரி இல்லாதவர்களைத் தொடர்பு கொண்டார்.

நண்பன் சாந்தனிற்கு ரெலிபோன் செய்தார். ரெலிபோனில் ‘றிங்ஓசையுடன் ‘டொக்என்ற  சத்தம் கேட்டது.

“உவங்களுக்கு எப்பவும் ஊர் சுத்துறதுதான் வேலைகோபத்தில் கத்தினார்.

எப்படியோ சாந்தனுக்கும் அழைப்பிதழ் அனுப்பினான் சதீஷ்.

சதீஷ்... ஏன்ராப்பா சாந்தன் திருமணத்திற்கு வரவில்லை?

“அப்பா... அவங்கட ஆன்சர்போனிலை நீங்கள் என்னத்தைப் பதிஞ்சனியள்?

சதாசிவத்திற்கு ‘டொக்சத்தம் ஞாபகத்திற்கு வந்தது.