Monday 1 January 2018

கங்காருப் பாய்ச்சல்கள் (27)

சாகிறவன் சாகட்டும்
சமீபத்தில் ஒரு தமிழரின் அங்காடிக்கு சில பொருட்கள் வாங்கப் போயிருந்தேன்.

நான் அங்கே  சென்றபோது அப்போதுதான் கடையைத் திறந்து கொண்டிருந்தார்கள்.

நான் செய்த பிழை கடை திறக்கும்போது அங்கே போனதுதான். கடை திறந்து சற்று நேரத்தின் பின்னர் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவசரத்தில் உள்ளே நுழைந்துவிட்டேன்.

வாங்கவேண்டிய பொருட்களைக் கூடைக்குள் நிரப்பிக் கொண்டிருக்கும் போது ஒரு குரல் :

“அண்ணை… இதெல்லாம் expiry ஆகிப் போய்விட்டது” குளிரூட்டியைத் திறந்தபடி அங்கே  எடுபிடி வேலைசெய்யும் ஒருவன் முதாலாழியைப் பார்த்துச் சொன்னான்.

“எல்லாத்தையும் வெளியாலை எடுத்துப் போடு. வாங்கிறவன் வாங்கட்டும். விடுறவன் விடட்டும். சாகிறவன் சாகட்டும். வயித்தாலை அடிச்சுக் கிடக்கிறவன் கிடக்கட்டும்” என்றார் முதலாழி.

அவன் மறு பேச்சில்லாமல் குளிரூட்டியில் இருந்து அந்தக் குளிர்பானங்களை வெளியே எடுத்து அடிக்கி வைக்கத் தொடங்கினான். அவை சிறுசிறு பெட்டிக்குள் அடங்கிய குளிர்பானங்கள்.

என்னுடன் வேறும் சிலர் அங்கே நின்றிருந்தோம். முதலாழிக்கு அது பற்றிக் கவலை இல்லை.

சாகிறவன் சாக, பிழைக்கிறவன் பிழைக்கட்டும்.


எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. நான் நியூசிலாந்தில் இருக்கும்போது இப்படி expiry ஆன பொருட்களைக் கடையில் காண்பதில்லை. அப்படி யாராவது வைத்திருந்தால், அவர்களுக்கு தண்டப்பணம் அறவிட்டு கடையைச் சீல் செய்து விடுவார்கள். அவுஸ்திரேலியாவில் இப்படி பல கடைகளில் expiry ஆன பொருட்களை விற்பதை நான் கண்டிருக்கின்றேன்.

No comments:

Post a Comment