Showing posts with label FICTION. Show all posts
Showing posts with label FICTION. Show all posts

Sunday, 1 September 2024

ரகசிய பொலிஸ்

 
அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை.

 காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.

 அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்புவார்.

 என்னிடம் சினிமாப் பாட்டுக்கள் அடங்கிய சிறுசிறு புத்தகங்கள் இருந்தன. அவற்றை அண்ணா வாங்கிப் படித்துவிட்டு என்னிடம் தருவார். சிலவேளைகளில் அவற்றில் சில காணாமல் போய்விடும். இந்தத்  தடவை ரகசியப் பொலிஸ் 115 காணாமல் போய்விட்டது. அவற்றைத் தேடி அண்ணாவின் பொக்கிஷங்கள் அடங்கிய அறைக்குப் போவேன். அப்போது அங்கே அக்கா எதையோ அங்கு தேடிக் கொண்டிருந்தார். அவரது கையில் வினோத எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த கொப்பி ஒன்று இருந்தது. அக்கா சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்தக் கொப்பியை அங்கே வைத்துவிட்டுப் போனார்.

Monday, 14 September 2020

சிக்கனம் முக்கியம் - சம்பவம் (1)

 


“வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும் செய்துகொள்ள முடியாது. அழைப்பிதழ் அடிப்பதில் முயன்று பார்க்கலாம் எனக் களம் இறங்கிவிட்டார் அகமுகிலன்.

ஏதோ இங்கிலிசில் அடிக்க தமிழில் வருமாமே! ஒற்றை விரலால் கீ போர்டை நொருக்கித் தள்ளி கொம்பியூட்டர் திரையில் அழைப்பிதழை அடித்துவிட்டார். அழைப்பிதழ் பகட்டாக இருக்க – புத்தகம், தொட்டெழுதும் பேனா, இறகு  என்னும் ஓவியப்பின்னணி கொண்ட `பக்கிறவுண்ட்’ ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டார். வந்ததே வினை. அழைப்பிதழை `பக்கிறவுண்டிற்குள்’ கொண்டு செல்லும்போது எழுத்துக்கள் அங்கும் இங்கும் ஓடின. ஒருவிதமாக ஒரு வசனத்தைச் சரிக்கட்டிக் கொண்டு வந்துவிட்டு, மறு வசனத்தைப் பார்த்தால் அது குதித்துக் கூத்தாடி இருக்கும். அவர் அடித்த சொற்களில் சிலவற்றைக் காணவும் இல்லை. போராடிக் களைத்து, அப்படியே போட்டுவிட்டு உறக்கத்திற்குப் போய்விட்டார்.

 

உறக்கம் வரவில்லை. மூன்று தடவைகள் விழித்து எழுந்து கொம்பியூட்டருக்கு முன்னால் போய் இருந்தார். தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு, அழைப்பிதழில் சொற் சிலம்பாட்டம் விளையாடினார். `மாலை என்பதைப் `பிற்பகல்’ என்று மாற்றினார். பின்னர் `பிற்பகல்’ என்பதை `பி.ப’ என மாற்றினார். இப்படிச் சதுரங்கம் விளையாடி, விடிய ஐந்து மணிக்குள் எல்லாவற்றையும் சரிப்படுத்திவிட்டு உறக்கத்திற்குப் போனார்.

Thursday, 28 July 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

By
Kathir Balasundaram

Chapter 12

Money Talks

Haran Kandiah returned to Jaffna by Thursday night—the same night of Raman’s suicide. His stay at the Kilinochchi Base Hospital had at least allowed him to breathe again and get his asthma back under some measure of control. He returned determined to raise the sixteen million rupees and rescue his sister from the clutches of the wretched Tamil Tigers.
First, he called his niece, Dr. Maithily Rooban in Australia. To his surprise, she was already aware of the situation regarding her mother. Her nervous voice spoke volumes about the tension the younger woman was under. “Mama,” she said using the familiar Tamil term for ‘uncle.’ “My husband and I just bought a rather large house. We don’t have a dime right now. Our mortgage and utilities are taking everything we make.” Haran heard her swallow hard. “My husband recently took out a loan of 18,000 US dollars to help pay for a dowry for his sister…Mama, I don’t know what to do!”

Wednesday, 10 February 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

by


Kathir Bala Sundaram


Chapter 1
Behind the Smile  

A Mitsubishi Pajero jeep left the Town of Kilinochchi carrying soldiers of the Tamil Tiger Vanni regime. Their destination was the celebrated Vembady Girls’ College* in the City of Jaffna. They were dressed in civilian clothing as required by the Cease Fire Agreement of 2002 between the racist Sri Lanka government and the insurgent Tamil Tigers. They accompanied the Minister of Political Affairs. Not a single soldier—the Minister included—had any idea what they were walking into. Neither could they comprehend the complete and utter turmoil that would result from the defiance of two thousand young ladies of the Vembady Girls’ College.
It was the first Wednesday in January, 2006, and all schools in the Jaffna peninsula were just beginning their first term. Students rushed about the city of Jaffna on bicycles or on foot, winding in and out of tall palmyra groves. School buses bounced along the unrepaired roads in an effort to deliver students to their destinations on time. By 9:00 a.m. Vembady Girls’ College was in full swing.