Wednesday, 3 December 2014

டோர்ச் லைட் - சிறுகதை

 
தெல்லிப்பழை
1983,12-01

அன்புமிக்க மகன் விநோ அறிவது,

நாங்கள் அனைவரும் நற்சேமமாகவுள்ளோம். அதுபோல் நீயும் சேமமாகவிருக்க விநாயகர் அருளை வேண்டியிருக்கிறேன்.

மேலும் நீ ஒரு 'ரோச்லைற்' வாங்கப் போவதாகவும், இருளிற்குள் செல்லப் பயமாகவிருக்கிறதென்றும்  கடிதத்தில் எழுதியிருந்தாய். அப்படி இருளில் எங்குதான் போகின்றாய்?

தந்தையின் வழியில் - சிறுகதை



அது ஒரு காலைப் பொழுது. வெறுமை என்னும் சுமையைச் சுமக்க மாட்டாமல் குஞ்சு நடந்து கொண்டிருந்தாள். நடை என்னும் பதத்திற்கு அர்த்தத்தைக் கற்பிக் காமல் இயங்க மறுத்த கால்கள் முன்னும் பின்னும் கோணி நெளிந்தன.

                காலை இரை குஞ்சுவிற்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவள் வயிறு வெறுமை அடைந்திருக்காது. இப்பொழுது ஒரே பசி!

இனி ஒரு விதி செய்வோம்! - சிறுகதை



              













 ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
  கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
  கோடி என்றால் அது பெரிதாமோ?’
-              பாரதியார்

அவர்கள் சூனிய வெளியையே நித்தமும் தரிசனம் செய்பவர்கள். நாளைய பொழுதை ஒருபோதுமே நினைத்துப் பார்க்காதவர்கள். இருட்டு உலகிலே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் மனம் - உறுதி கொண்டது, தெளிவானது, சலனமற்றது, ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்கியது.

Monday, 1 December 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 6) - கதிர் பாலசுந்தரம்

மிருகங்கள்

கூடார வாசலில் நிற்கத் தெரிகிறது. உயர்ந்து வளர்ந்த வெள்ளைக்காரன் ஒருவனும் தெரிகிறான். இரண்டு மூன்று புதிய வாகனங்கள் பாடசாலை வாயிலில். பெரிய உத்தி யோகத்தர்கள் போலவிருக்கிறது. கொடுத்த நன்கொடைக்கு வேலை நடக்குதோ என்று கணக்குப் பார்க்க வந்திருக்கிறார், கொழும்பு ஜேர்மன் அரசதூதுவர்.

பாடசாலைக் கட்டிடச் சுவர்கள் பூரணமாக எழுந்து நிற்கின்றன. டானா வடிவில். யன்னல் கதவு வைக்கும் இடைவெளிகள் தெரிகின்றன. வகுப்பறைகள், அலுவலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், அதிபர் விடுதி. பொலிவாக அழகாக இருக்கப் போகிறது.