அவுஸ்திரேலியாவில் ஒரு காலை நேரம்.
ரெலிபோன் அடித்தது. எடுத்தேன்.
மறுமுனையில் அந்தப்பெண் விக்கி விக்கி அழுதாள். பேச்சு
வரவில்லை. எதையும் சரிவரச் சொன்னால்தானே அவர் யார் என்ன சொல்கின்றார் என்பதை நான்
புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவரது குரலில் இருந்து அவர் தமிழினி என்பதை
அடையாளம் கண்டுகொண்டேன். தமிழினி நண்பன் ஜெயரதனின் மனைவி.
“உங்கடை வைஃப் இருக்கிறாவா? அவரிடம் கொடுங்கள்” ஒருவாறு
தானே தன்னைத் தேற்றிக் கொண்டு சொன்னாள் தமிழினி.




