Friday, 13 May 2016

கண் திறந்தது


ஜய வருடம் பிறந்தது. சிவா – விஷ்னு கோவிலுக்குச் சென்றோம். சுவாமி கும்பிட்டு அருச்சனை செய்து வெளியே வர மணி பன்னிரண்டரை ஆகிவிட்டது.

அன்னதானத்திற்கு கோவில்மண்டபத்தைச் சுற்றி பெரிய வரிசை காத்திருந்தது. சின்னஞ்சிறிசுகள் முதல் முதியோர்கள் வரை நிரையில் நின்றார்கள். நாங்களும் அந்த வரிசையில் இணைந்து கொண்டோம். வரிசை மெதுவாக ஊர்ந்தது. பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் கோடை வெய்யில். அனல் காற்று அடித்தது. எங்களுக்கு முன்னால் மெல்பேர்னின் பிரபல வைத்தியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் குடை ஒன்றின் கீழ்.

கன்ரீனிலை காசு குடுத்துச் சாப்பிடலாம்சொல்லியபடி ஒருசிலர் வரிசையிலிருந்து விலகிச் சென்றார்கள்.

வைத்தியரும் வர்த்தகரும் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். வரிசையில் உள்ளவர்களிடம் காசு இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல. வருடப்பிறப்பு தினத்தில் கோயிலில் சாப்பிடவேண்டும் என்று ஒரு இறை உணர்வுதான்.

Tuesday, 10 May 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION

 

By
Kathir Balasundaram

Chapter 7

Freedom Fighter
 
The Minster of Political Affairs stood in his luxurious bedroom adjusting his camouflage uniform. He had a special meeting in about two hours that he needed to prepare for. He was deep in thought, his lips moving but issuing no sound. His disgrace at the Vembady Girl’s College weighed heavily on his mind, and he frequently glanced at the ceiling, lost in thought.
His wife, Komathy, watched her distinguished husband with concern. She fidgeted herself, adjusting her blue salwar kameez*—a popular Indian dress—as she glanced worriedly at her husband. She didn’t understand his distress, because she didn’t take the disturbance at the Vembady Girls’ College seriously. She held faith that her husband’s good relationship with His Royal Highness would remain close no matter what. She assumed that His Royal Highness depended greatly on her husband.

Saturday, 7 May 2016

நிதி சேகரிப்பு


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

பாடசாலை சறிற்றிக்காக சொக்கிளேற் விற்க வேண்டும்.

பிரணவன் அயல் வீடுகளுக்குச் சென்றான். இரண்டு டொலர்களுடன் கவலையாக வந்தான். ஒருவரும் வாங்கவில்லை.

நாளை அடுத்த வீதிக்குச் செல்வோம் என்றார் அம்மா.

மறுநாள் பிரணவன் பாடசாலை சென்றதும், தாயார் அடுத்த வீதிக்குச் சென்றார். மகனிடம் சொக்கிளேற் வாங்கும்படி அவர்களிடம் நாணயக்குற்றிகளைக் கொடுத்தார். பலர் காசை வாங்க மறுத்து, தாங்கள் மகனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள்.

மாலையில் எல்லாவற்றையும் விற்று மகிழ்ச்சியில் வந்தான் மகன்.



Sunday, 1 May 2016

’உணர்வுகள்’ கவிதைத்தொகுதி – ஒரு அறிமுகம்


இந்த ‘உணர்வுகள்’ கவிதைத்தொகுதியை வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் இது பல அரிய விடயங்களைப் பொக்கிஷமாகத் தந்து நிற்கின்றது. பாடாத பொருளில்லை எனும்படியாக பொருட்பரப்பு விரிந்து காணப்படுகின்றது. இதன் ஆசிரியர் ஜெயராமசர்மா - பாரதியார், கவிமணி, பட்டுக்கோட்டையர், கவியரசர், மகாகவி போன்றவர்களின் கவிதைகளில் திளைத்து, அவர்களை அடியொட்டி எழுதிச் செல்கின்றார். இவர் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப்பட்டதாரி. கல்வியியற்துறை, சமூகவியற்துறை, கற்பித்தல் நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேறியவர். அத்துடன் ஆசிரியர், அதிபர், உதவிக்கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர் என்ற பல பதவிகளை வகித்தவர்.

இவரின் புத்தகத்திற்கு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன், கவிப்பேரரசு வைரமுத்து என்பவர்கள்  வாழ்த்துரையும் – டாக்டர்.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்), முனைவர் இரா.மோகன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), முனைவர் அரங்க.பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் முனைவர் சரசுவதி இராமநாதன் என்பவர்கள் அணிந்துரையும் வழங்கிக் கெளரவித்திருக்கின்றார்கள். இதிலிருந்தே இத்தொகுதியின் கனதியைப் புரிந்து கொள்ளலாம்.