ஜய வருடம் பிறந்தது. சிவா – விஷ்னு கோவிலுக்குச் சென்றோம்.
சுவாமி கும்பிட்டு அருச்சனை செய்து வெளியே வர மணி பன்னிரண்டரை ஆகிவிட்டது.
அன்னதானத்திற்கு ’ கோவில்’ மண்டபத்தைச்
சுற்றி பெரிய வரிசை காத்திருந்தது. சின்னஞ்சிறிசுகள் முதல் முதியோர்கள் வரை
நிரையில் நின்றார்கள். நாங்களும் அந்த வரிசையில் இணைந்து கொண்டோம். வரிசை மெதுவாக
ஊர்ந்தது. பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் கோடை வெய்யில். அனல் காற்று அடித்தது.
எங்களுக்கு முன்னால் மெல்பேர்னின் பிரபல வைத்தியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும்
குடை ஒன்றின் கீழ்.
’கன்ரீனிலை
காசு குடுத்துச் சாப்பிடலாம்” சொல்லியபடி ஒருசிலர்
வரிசையிலிருந்து விலகிச் சென்றார்கள்.
வைத்தியரும் வர்த்தகரும் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். வரிசையில்
உள்ளவர்களிடம் காசு இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல. வருடப்பிறப்பு தினத்தில்
கோயிலில் சாப்பிடவேண்டும் என்று ஒரு இறை உணர்வுதான்.





