இந்தக் கதையானது 1970-களில் தொடங்கி ஈழப் போர்ச் சூழலில் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் வாழ்வியல் மாற்றங்களை விவரிக்கிறது. குமரேசன், சிவகாமி ஆகியோரின் மகளான ஆராதனா பிறந்தது முதல் அவளது பூப்புனித நீராட்டு விழா வரையிலான நிகழ்வுகளையும், சிவகாமி தனது உறவினர்களிடம் காட்டும் அன்பும் அவர்களால் வஞ்சிக்கப்படுவதையும் இது சித்திரிக்கிறது. போர் தீவிரமடையும் போது, மகன் அகிலன் இயக்கத்தில் இணைவதும், இந்திய அமைதிப்படையின் வருகையால் குடும்பம் சிதறுவதும் விரிவாகக் கூறப்படுகிறது. உறவுகளுக்கு இடையிலான பொறாமை, நிறவெறி மற்றும் சொத்துத் தகராறுகள் ஒருபுறமும், போர் தரும் இடப்பெயர்வும் உயிரிழப்புகளும் மறுபுறமுமாக இக்கதை நகர்கிறது. இறுதியில், ஊரை விட்டு வெளியேறும்போது முதியவரான சண்முகசுந்தரத்தை விட்டுச் செல்வதும், அவரைத் தேடிச் சென்ற மகன் இளங்கோ காணாமல் போவதும் போரின் கொடூரத்தை உணர்த்துகின்றன. இத்தொகுப்பு ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் சிதைவையும், ஈழ மண்ணின் வரலாற்றுத் துயரத்தையும் ஆராதனாவின் வாழ்வின் ஊடாகப் பதிவு செய்கிறது.
சுருதி
Friday, 9 January 2026
Thursday, 8 January 2026
சொல்லில் வருவது பாதி - பாகம் 1 (ஸ்ரீதர்)
இந்த ஆதாரங்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவிய போர்க்காலச் சூழலையும், அதன் விளைவாகச் சாதாரண மக்கள் எதிர்கொண்ட வாழ்வியல் துயரங்களையும் ஆழமாகப் பதிவு செய்கின்றன. 1970-களில் தொடங்கி 1980-களின் இறுதி வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்தக் கதைகள், இயக்கங்களுக்கு இடையிலான மோதல்கள், கட்டாய ஆள்சேர்ப்பு மற்றும் இராணுவ அடக்குமுறைகளை விவரிக்கின்றன. கல்வி பயிலும் இளைஞர்கள் எவ்விதத் தொடர்பும் இன்றி சித்திரவதை முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுவதையும், அதனால் குடும்பங்கள் சிதைவதையும் இந்த நாவல் சித்தரிக்கிறது. சீமெந்து ஆலை பின்னணியில் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்களும், யாழ்ப்பாணக் கலாச்சாரக் கூறுகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன. இறுதியில், யுத்தத்தின் பிடியில் சிக்கிய ஒரு சமூகத்தின் அச்சம், இடப்பெயர்வு மற்றும் வலி நிறைந்த நினைவுகளின் தொகுப்பாக இது அமைகிறது.
Monday, 5 January 2026
சொல்லி வருவது பாதி - முன்னுரை
சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டியில் இந்த நாவல் தேர்வாகியிருக்கின்றது. இதுவே அச்சில் வெளிவரும் எனது முதல் நாவல். ஏற்கனவே மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் ஒரு குறுநாவலும் அச்சில் வந்திருக்கின்றன.
`ஒற்றுமையே பலம்’ என்பது ஒரு பழங்கால நீதிக்கதை. அதில் வரும் குச்சிகள் போல இன்று நாம் எல்லாரும் தனித்தனியே பிரிந்து கிடக்கின்றோம். எத்தனையோ வருடங்கள் நாம் அடிமைப்பட்டிருந்தும், அதிலிருந்து பாடம் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. சிலர் பட்டுத்தெளிந்து கண் விழித்தாலும் செய்வதற்கு வழி தெரியாது திகைத்துக் கிடக்கின்றார்கள். நல்லது செய்வதைத் தடுப்பவரும் நம்மவரே. குச்சிகளை ஒன்றாகக் கட்டி, அதை உடைக்க முடியாதபடி வலிமையாக்குவது எப்போது?
இந்தக் கதை,1970/1995 காலப் போர்ச்சூழலில், இலங்கையின் வடபுறத்தேயுள்ள எல்லைக்கிராமமொன்றில் நிகழ்கின்றது. அரச அட்டூழியங்கள், இயக்கங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி இங்கே விலாவாரியாகச் சொல்லப்படவில்லை. நாவலின் நோக்கமும் அதுவல்ல. அதன் பின்னணியில் – கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை, சில குடும்பங்களுக்கிடையேயான ஊடாட்டம், குறிப்பாக பெண்களின் கோபதாபங்கள் பிடிவாதம் சூழ்ச்சிகள் என்பவற்றை இணைத்து ஒரு திருமணத்தை சஸ்பென்ஸ் ஆக்கியிருக்கின்றேன். குண்டு வெடிப்பைவிட உறவினர்களிடையே நிகழும் குழப்பத்தின் தாக்குதலை நீங்கள் கடுமையாக உணரக்கூடும். மூன்று பாகங்கள் கொண்ட இந்த நாவல், மணம் முடித்த தம்பதியினர் புலம்பெயர்ந்து செல்வதோடு முடிந்து விடுகின்றது. வருங்காலத்தில், அதன் நீட்சியாக புலம்பெயர்ந்த நாட்டை மையமாகக் கொண்டு இன்னொரு நாவலும் எழுதும் எண்ணமுண்டு.
நடுவராக இருந்து இந்த நாவலைத் தேர்வு செய்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கும், சுவாசம் பதிப்பகம் ஹரன் பிரசன்னா மற்றும் ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கும் எனது நன்றிகள்.
அன்புடன்,
கே.எஸ்.சுதாகர்
(அவுஸ்திரேலியா)
kssutha@hotmail.com
https://shuruthy.blogspot.com/
Thursday, 1 January 2026
சொல்லில் வருவது பாதி - நாவல் - சென்னை புத்தகக் கண்காட்சியில்
சொல்லில் வருவது பாதி – நாவல்
இலங்கைப் போர்ச் சூழலின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் இருபது வருட வாழ்வியலைப் பேசுகிறது நாவல்.இவர்கள் எந்த இயக்கத்தினையும் சாராதவர்கள். எந்தக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்காதவர்கள். சாதாரண மனிதர்கள். தங்கள் வாழ்க்கையை நேர்மையாக வாழ நினைப்பவர்கள்.
பதற்றமே அன்றாட வாழக்கையாக மாறுபடும் நிலையும், போர்ச்சூழலும் எவ்விதம் மக்களைப் பாதிக்கின்றன என்பதையும், இயல்பு வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாக மாறும் தருணத்தையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.
நம் கண்முன்னே கண்ட காட்சிகள் எவ்வாறெல்லாம் மாறுகின்றன என்பதைக் கதையின் ஊடே இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் கே.எஸ்.சுதாகர்.
இயல்பான மொழியும் நேர்மையான பதிவுமே இந்த நாவலின் பலம்.
வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற நாவல்.
சொல்லில் வருவது பாதி, கே.எஸ்.சுதாகர், ரூ 380, அட்டை ஓவியம்: ஓவியர் தமிழ், சுவாசம் வெளியீடு.



