கதையாடல் : கெளசி, ரக்ஷனா, ராஜாராம்
சுருதி
Tuesday, 20 January 2026
Friday, 16 January 2026
சொல்லில் வருவது பாதி - பாகம் 2 - அத்தியாயம் 26
மொத்தம் 44 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல், மூன்று பாகங்களைக் கொண்டது.
பாகம் 1 – ஸ்ரீதர்
பாகம் 2 – ஆராதனா
பாகம் 3 – திருமணம்
சொல்லில் வருவது பாதி – நாவல் தற்போது விற்பனையில் இருப்பதால்,
பாகம் ஒன்றிலிருந்து முதலாவது அத்தியாயத்தையும், பாகம் இரண்டிலிருந்து இருபத்தியாறாவது அத்தியாயத்தையும் இங்கே தருகின்றேன்.
ஆர்வம் உள்ளவர்கள் தற்போதையை சென்னை புத்தகக் கண்காட்சியில் – சுவாசம் பதிப்பகத்தில் இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் வெண்பா புத்தகசாலையில் பெற்றிக் கொள்ளலாம்.
Thursday, 15 January 2026
சொல்லில் வருவது பாதி - பாகம் 1 - அத்தியாயம் 1
மொத்தம் 44 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல், மூன்று பாகங்களைக்
கொண்டது.
பாகம் 1 – ஸ்ரீதர்
பாகம் 2 – ஆராதனா
பாகம் 3 – திருமணம்
சொல்லில் வருவது பாதி – நாவல் தற்போது விற்பனையில் இருப்பதால்,
பாகம் ஒன்றிலிருந்து முதலாவது அத்தியாயத்தையும், பாகம் இரண்டிலிருந்து
இருபத்தியாறாவது அத்தியாயத்தையும் இங்கே தருகின்றேன்.
ஆர்வம் உள்ளவர்கள் தற்போதையை சென்னை புத்தகக் கண்காட்சியில்
– சுவாசம் பதிப்பகத்தில் இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் வெண்பா புத்தகசாலையில்
பெற்றிக் கொள்ளலாம்.
Friday, 9 January 2026
சொல்லில் வருவது பாதி (நாவல் ) – பாகம் 2 (ஆராதனா)
இந்தக் கதையானது 1970-களில் தொடங்கி ஈழப் போர்ச் சூழலில் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் வாழ்வியல் மாற்றங்களை விவரிக்கிறது. குமரேசன், சிவகாமி ஆகியோரின் மகளான ஆராதனா பிறந்தது முதல் அவளது பூப்புனித நீராட்டு விழா வரையிலான நிகழ்வுகளையும், சிவகாமி தனது உறவினர்களிடம் காட்டும் அன்பும் அவர்களால் வஞ்சிக்கப்படுவதையும் இது சித்திரிக்கிறது. போர் தீவிரமடையும் போது, மகன் அகிலன் இயக்கத்தில் இணைவதும், இந்திய அமைதிப்படையின் வருகையால் குடும்பம் சிதறுவதும் விரிவாகக் கூறப்படுகிறது. உறவுகளுக்கு இடையிலான பொறாமை, நிறவெறி மற்றும் சொத்துத் தகராறுகள் ஒருபுறமும், போர் தரும் இடப்பெயர்வும் உயிரிழப்புகளும் மறுபுறமுமாக இக்கதை நகர்கிறது. இறுதியில், ஊரை விட்டு வெளியேறும்போது முதியவரான சண்முகசுந்தரத்தை விட்டுச் செல்வதும், அவரைத் தேடிச் சென்ற மகன் இளங்கோ காணாமல் போவதும் போரின் கொடூரத்தை உணர்த்துகின்றன. இத்தொகுப்பு ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் சிதைவையும், ஈழ மண்ணின் வரலாற்றுத் துயரத்தையும் ஆராதனாவின் வாழ்வின் ஊடாகப் பதிவு செய்கிறது.