Friday 10 July 2020

மாதவியா? காஞ்சனாவா?

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

பாலன் இலங்கையில் இருக்கின்றான்.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் தந்தையுடன் கதைக்கும்போது,

“உனக்குக் கோவலன் கண்ணகி காஞ்சனா கதை தெரியும் தானே!” என்றார் அப்பா.

`அப்பாவுக்கு மாறாட்டம் பிடித்துவிட்டதா?’ யோசித்தான் பாலன். காஞ்சனா அப்பாவின் தங்கை பெண். அவுஸ்திரேலியாவில் அப்பாவின் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்றாள்.

“என்ன அப்பா சொல்கின்றீர்கள்? கோவலன் கண்ணகி மாதவி அல்லவா?”

“அடப் போடா…. உனக்கு இப்பவே மாறாட்டம்.”

`ஏதோ உள் குத்து இதில் இருக்கவேண்டும்’ நினைத்தான் பாலன்.


No comments:

Post a Comment