Monday 22 February 2021

ஏன் பெண்ணென்று... - குறுநாவல்

 

இன்றிலிருந்து 5 நாட்களுக்கு  kindle இல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 

இணைப்பிற்கு Amazon

வலதுகாலை எடுத்து வைத்து மணமக்கள் வீட்டிற்குள் சென்றார்கள். பத்மினியின் தாயாரால் நிமிர்ந்து நிற்கமுடியாது. நாரியிலே கையூன்றி, ஊன்றிய இடத்திலிருந்து நிமிர்ந்து மணமக்களைப் பார்த்தார். சந்திரமோகனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்துவிட்டது.  மரியாதை நிமிர்த்தம் அடக்கி நின்றான். இராகுகாலம் முடிவதற்குள், மணமக்களை அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் அழைத்துச் சென்றார் கணபதிப்பிள்ளை.

ஹோட்டல் றூம் தோற்றுப் போய்விடும். உயர்ந்த கட்டில். மடிப்புக் கலையாத படுக்கை விரிப்புகள். அறை முழுவதும் முட்டி நின்று, வாசலைத் திறந்ததும் பறந்தோடிட நிற்கும் பாரிஸ் சென்றின் நறுமணம்.  மங்கிய நிலவொளி பரப்பி நிற்கும் நீலநிற `நைற் பல்ப்’.

சம்பிரதாய உரையாடல்களில் சில நிமிட நேரம் சுகித்திருந்தனர். மினியின் மேனியைப் போர்த்திருந்த கூறை சரசரவென்று அகல, மினி நைற்றியில் நின்றாள். மினியின் அழகில் சொக்கி நின்ற சந்துறு, அவளை இழுத்துப் பறித்துக் கட்டிலில் சரித்தான். முதல் தடவையாக அவளை உற்று நோக்கினான். ஏதோ ஒன்றைக் கேட்பதற்காக எத்தனித்தான். வாய் இடறியது. இடறிய வாய் இடறியதுதான்.

“நீ இதற்கு முன் இப்படி யாருடனாவது படுத்து இருக்கின்றாயா?”


No comments:

Post a Comment