Thursday, 10 December 2020

இப்படியும் ஒருவன் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

மா.பாலசிங்கம்

`ம்பா... ம்பா... ம்பா..’

செங்காரிப் பசு கத்தும் ஓசை கமலத்தின் காதைத் துளைக்கின்றது.

பசுவின் கதறலுக்குக் காதைக் கொடுத்துக் கொண்டிருந்த கமலத்திற்கு அடுப்பின் நிலைமை மறை பொருளாகி விட்டது. பரபரப்போடு அடுப்பைப் பார்க்கின்றாள். பனஞ் சொக்கறை புகட்டிற்கு வெளியே விளாசி எரிந்து கொண்டிருக்கின்றது. கைச் சுறுக்கோடு சொக்கறையை அடுப்பிற்குள் தள்ளுகிறாள்.

`ம்பா... ம்பா... ம்பா..’

செங்காரிப் பசுவின் கதறல் தணிந்துவிடவில்லை.

Thursday, 3 December 2020

பூ - எனக்குப் பிடித்த சிறுகதை

 

இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான்


பூத்துச் சொரிகையிலே 

பூக்கருகிப் போனதுவோ?
மாதா செய் தீவினையோ
மலரமுன்னே போனாயோ...?

நீ படுத்துக் கிடந்த அறைப் பக்கமிருந்து ஒப்பாரிக் குரல் கேட்கின்றது. அது உன் அம்மாவின் குரல். துக்கத்திற் கனத்துக் கதறுகின்றது. எது உன் முடிவாக இருக்கக் கூடாது என்று இவ்வளவு நேரமும் பிராத்தித்துக் கொண்டிருந்தேனோ, அதுதான் உன் முடிவா? என் கல்யாணி!

"ஏய் கெழவி. இதுங் ஹோஸ்பிட்டல்
தெரியுங்தானே! சத்தங் போட வேணாங்."

கிழவியை 'நேர்ஸ்' அறைக்கு வெளியே கொண்டு வந்து விடுகிறாள். புழுவாகத் துடித்து, சுவருடன் தலையை மோதிக் கொண்டே குரல் எழுப்பி அழுகின்றாள். 'மேளே, கல்யாணி நீ போய் விட்டியாடி?' என்று நெஞ்சு வெடிக்கப் புலம்புகிறாள். ஒவ்வொரு வார்த்தையும் என் என்பின் குழலட்டையையுஞ் சுண்டுகின்றது.

Friday, 6 November 2020

அதிர்வு – சிறுகதை

 


“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார்.

 அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில்,

 பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 கொண்டாட்டம் நாலுநாட்கள் நடைபெறும்.

 தங்கள் நல்வரவை நாடும்,

அகத்தன் – பாய்க்கியம் குடும்பத்தினர்

 “ஓ… சாமத்தியச் சடங்கு வைக்கப் போறாய் போல கிடக்கு?”