Tuesday, 15 January 2019

யாரோ ஒளிந்திருக்கின்றார்கள் - சிறுகதை


(ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன்செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - 2018 இல் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)

”சேர்! எங்கே என் மனைவி உமா? வழமையாக எட்டு மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடுவாரே…” காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வேகமாக வந்த களைப்பில், மனைவியைக் காணாத அதிர்ச்சியுடன் கேட்டான் சிறீபாலன்.

“பயப்படாதீர்கள்! இன்னும் அரைமணி நேரத்திற்குள் இங்கு வந்துவிடுவார். இன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நீங்கள் வெளியே உள்ள இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள். அங்கே நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. அல்லது ரெலிவிஷன் பார்க்கலாம்” சொல்லியபடியே அந்த ஆண் தாதி சிறீபாலனை நிமிர்ந்து பார்த்தார். பார்த்த மாத்திரத்தில், சிறீபாலனுக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது எனக் கவலை கொண்டார். அவருக்கு அருகே இருந்த பெண் தாதி மேசையில் குனிந்தபடி அவசர அவசரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

Monday, 14 January 2019

ரெஸ்டாரண்ட் சாப்பாடு - சிறுகதை



பாபுவின் பிள்ளைகள் ரெஸ்டாரண்டில் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் நண்பர்கள், “நான் மலேசியா ரெஸ்டாரண்டில் சாப்பிட்டேன்… நான் சைனீஷில் சாப்பிட்டேன்…. நான் கொரியனில் சாப்பிட்டேன்” என்று சொல்லும்போது அவர்கள் வாய் ஊறும்.

“ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஆகாது. ஒரே கொழும்பு” என்று சொல்லுவார் தந்தை பாபு. சமயத்தில் சில ரெஸ்டாரண்ட் வீடியோக் கிளிப்புகளையும் எடுத்து விடுவார். அது ரெஸ்டாரண்ட் வண்டவாளங்களையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கும்.

மனைவி சித்திரா ஒரு அப்பிராணி. ஏதோ ரெஸ்டாரண்ட் சாப்பாடு தனக்கும் ஒத்துவராது என்பதுமாப்போல் இருந்துவிடுவாள்.

ஒருநாள் பாபுவின் மனம் கல்லுக்குள் ஈரம் என்பதுமாப் போல் இளகியது. எந்த ரெஸ்டாரண்ட் நல்லது என நெட்டில் உசாவினார்.

Thursday, 22 November 2018

அவன் விதி – சிறுகதை


எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான்.

எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன். 25 மில்லியன்  மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்டது.

25 மில்லியன் டொலர்கள்….

இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது?

Thursday, 8 November 2018

பள்ளிச் சிறுமியின் பருவச்சுமை






அண்டனூர் சுராவின் ’கொங்கை’ நாவலை முன் வைத்து

தமிழர் பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்பெய்திவிட்டால், அதை ஒரு சடங்காக ‘சாமர்த்திய வீடு’ என்னும் பெயரில் கொண்டாடிவிடுவார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சிலர் அதற்குப் பெரிய விழாவே எடுத்துவிடுவார்கள். பெண்ணைக் ஹெலிகொப்டரில் ஏற்றி இறக்கி, பெரிய அரியணையில் மேள தாளங்களுடன் சுமந்து வந்து தாலாட்டி விடுகின்றார்கள். ஒருமுறை சிட்னி நகரில் எனது நண்பர் ஒருவரின் பிள்ளையின் சாமர்த்தியவீட்டிற்கு மெல்பேர்ண் நகரில் இருக்கும் நானும் மனைவியும் வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு போனபோது, வேலைத்தலத்தில் அதை விளங்கப்படுத்தப் பட்ட பாடு சொல்லிமாளாது. இதற்குச் சடங்கா? எங்கள் நாட்டில் பண்பாட்டில் இது இல்லையே எனப் பலர் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒரு சில நாடுகளில் பெண் பருவமெய்திவிட்டால் அவர்களின் வீட்டு வாசலில் கொடி கட்டிப் பறக்கவிடுவார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில், அவுஸ்திரேலியாவில் எனது இன்னொரு நண்பரின் பெண் எட்டு வயதிலேயே பெரியவளாகிவிட்டாள். மகிழ்ச்சி கொள்ளவேண்டிய தந்தை பெரும் துயரத்திற்கு உள்ளானார். மிகவும் சிறிய வயதிலே-பேதைப் பருவத்திலே-இது நடந்தமைக்கு யார் என்ன செய்யமுடியும். அவர் காதும் காதும் வைத்ததுமாப்போல் நாலுபேருடன் சடங்கை முடித்துவிட்டார்.