Tuesday 22 November 2022
Friday 18 November 2022
Monday 14 November 2022
ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’
பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்களில் அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கண்டு நான் மலைத்துப் போய்விட்டேன்.
அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் கடந்த ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி, ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’ என்னும் நூல் வெளியீட்டுவிழாக் கண்டது. அங்கேதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. சிவா விஷ்ணு ஆலய `பீக்கொக்’ மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்விற்கு, ஸ்ரீமதி பாலம் லக்ஷ்மண ஐயர் அவர்கள் தலைமை தாங்கினார்.
Friday 4 November 2022
Wednesday 2 November 2022
Tuesday 1 November 2022
ஜீசஸ் ஹாண்டில் – சிறுகதை
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை விமானம் அடைந்த போது, நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று முப்பதாகிவிட்டது. குணசேகரன், அவர் மனைவி கமலா, பிள்ளைகள் விமல், பாவனியை அழைத்துச் செல்வதற்காக பிரதாப்சிங் விமான நிலையத்தில் காத்திருந்தார். புது தில்லியில், கரோல் பா நகரில் அமைந்திருக்கும் `இரும்புக் கோட்டை’ ஹோட்டலுக்குப் போய் சேருவதற்கிடையில் புது தில்லியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்லிவிட்டார் பிரதாப்சிங்.
மெல்லிய செயற்கை வெளிச்சத்தில் வீதிகள் அழகாக இருந்தன. அமைதியாகவும் இருந்தன.
“இப்போது மயான அமைதியாக இருக்கும் இந்தப் பிரதேசங்கள் எல்லாம், இன்னும் கொஞ்ச நேரத்தில் விழிப்படைந்துவிடும். அதன் பின்னர் மனிதர்களே நகர்ந்துகொள்ள முடியாதவாறு நெரிசலாகவிடும்.” சொல்லிவிட்டு கண்ணைச் சுழற்றி எல்லாரையும் பார்த்துவிட்டு, “மிகவும் அவதானமாக இருங்கள்” என்று தாழ்ந்த குரலில் எச்சரிக்கையும் செய்தார். காரின் கதவுக் கண்ணாடிகளில் ஒன்று சிறிது பதிந்திருக்க வேண்டும். இரவுக்காற்று காரிற்குள் விசில் அடித்து அவரது எச்சரிக்கையை ஆமோதித்தது.