Friday 30 August 2019

கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி - 2019


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - அறம் கிளை நடத்தும்

கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி

Wednesday 28 August 2019

வட இந்தியப் பயணம் (9)


 
9. 
மறுநாள் பயணத்தில், பஸ்சினில் இடமிருந்ததால் நாங்களும் பதிவு செய்து கொண்டோம். சுவாமி நாராயணன் கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கம். இந்தப்பயணத்தில் ஹுமாயூன் மன்னரின் சமாதி (Humayun’s Tomb), தேசிய அருங்காட்சியகம் (National museum), காந்தி இல்லம்/காந்தி சமிதி (Birla House), சுவாமி நாராயணன் கோவில் (Akshar Dham Temple/Swaminarayan) என்பவை இடம்பெற்றிருந்தன.

Friday 23 August 2019

வட இந்தியப் பயணம் (8)


8.

மீண்டும் பயணம் தொடர்ந்தது.

டெல்கியில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களாக இந்திரா காந்தி ஞாபகார்த்த நிலையம், நேரு / மகாத்மா காந்தி அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டோம்.

இந்திராகாந்தியின் அதிகாரபூர்வ இருப்பிடமாக இருந்த இந்த இல்லம் தற்போது அவரது ஞாபகங்களைத் தாங்கி நிற்கும் மியூசியமாக உள்ளது. நேரு, இந்திராகாந்தியின் பல அரிய புகைப்படங்கள், இந்திராகாந்தி பாவித்த பொருட்கள், அவர் பாவித்த நூலகம் எனப் பலவற்றை அங்கே பார்க்கக்கூடியதாக இருந்தது. அத்துடன் அவரது மெய்ப்பாதுகாவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

 

Friday 16 August 2019

வட இந்தியப் பயணம் (7)

 

7.

சனிக்கிழமை டெல்கி, புது டெல்கியில் அமைந்திருக்கும் இந்தியாவின் நுழைவாயில் (India Gate), தாமரைக்கோயில் (Lotus Temple), குதுப்மினார் (Qutab Minar), இந்திரா காந்தி ஞாபகார்த்த நிலையம், நேரு / மகாத்மா காந்தி அருங்காட்சியகங்கள், மகாத்மா காந்தி சமாதி (Raj Ghat), பாராளுமன்றம் (Parliament House), குடியரசுத்தலைவர் இல்லம் (Rashtrapati Bhawan), பிர்லா மந்திர் (Birla Mandir), செங்கோட்டை (Red Fort) என்பவற்றைப் பார்வையிட இருந்தோம்.

காலை 5 மணியளவில் எமது ஹோட்டலை அண்மித்து பெரிய ஆரவார ஒலி கேட்டது. அந்த வாத்தியங்களின் இன்னிசையுடன் துயில் கலைந்தது. வெளியே ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பார்த்தபோது, திருமணத்திற்கான ஏற்பாட்டுடன் ஒரு மணவாளன் தன் உற்றம் சுற்றம் புடைசூழ வாத்தியக்கருவிகள் முழங்க அழைத்துச் செல்லப் பட்டுக்கொண்டிருந்தார். மனிதர்களின் பின்னே சில நாய்களும் ஊர்வத்தில் கலந்து கொண்டிருந்தன. நல்லதொரு மங்களகரமான காட்சியுடன் அன்று விழித்தோம்.

Tuesday 6 August 2019

வட இந்தியப் பயணம் (6)



6.

உண்மையைச் சொல்லப் போனால் தாஜ்மகாலைப் பார்த்தவுடன் என் மனதில் ஒரு சிறு ஏமாற்றம். இதுநாள் வரையிலும் நான் தாஜ்மகாலை சினிமாவிலும் புகைப்படமாகவும் தான் பார்த்திருந்தேன். நேரில் பார்க்கும்போது அதன் அழகில் சற்று மாறுதல் இருந்ததுதான் அதற்குக் காரணம். தாஜ்மகாலைச் சென்றடைந்தபோது நேரம் 3 மணியாகிவிட்டது. மாலை 5 இற்குள் திரும்பிவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அன்று ஏனோ தாஜ்மகால் மக்கள் கூட்டத்தினரால் நிரம்பி வழிந்தது. பல புகைப்பட விற்பன்னர்கள் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தார்கள். எமக்கென ஒதுக்கப்பட்டிருந்தவர் மூலம் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

Thursday 1 August 2019

வட இந்தியப் பயணம் (5)



5.
ஆக்ரா கோட்டையில் (செங்கோட்டை) மொகலாயப்பேரரசர்கள் பாபர், ஹிமாயுன், அக்பர், ஜஹாங்கிர், சாஜகான், ஒளரங்கசீப் போன்றோர் வாழ்ந்தார்கள்.

இங்கேதான் சாஜஹான் இறக்கும் வரையும் (1666) தனது மகன் ஒளரங்கசீப் இனால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டிருந்தார். அங்கேயிருந்தபடியே தான் தனது காதல் மனைவிக்காகக் கட்டிய தாஜ்மகாலைப் பார்த்து கொண்டே இருந்து மரித்துப் போனார் சாஜஹான். அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிட்டோம். அங்கிருந்தபடியே தூரத்தில் பனிப்புகார்களுக்கிடையே தெரியும் தாஜ்மகாலையும் பார்த்துக் கொண்டோம்.