Monday 31 May 2021
Friday 28 May 2021
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்
நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை.
2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள்
சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை.
3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள்
முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு.
4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள்
ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை.
5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள்
சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு.
Thursday 20 May 2021
அர்ப்பணம், சமர்ப்பணம். – சிறுகதை
மேகலா, சிந்துவின் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் இன்று எதற்காக வந்திருக்கின்றாள் என்பது சிந்துவிற்குத் தெரியும். சமையலறை சென்று தனக்கும் மேகலாவிற்குமாக தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு, ஹோலிற்குள் நுழைந்தாள் சிந்து.
சிந்துவும் மேகலாவும் தொழில்நுட்பக்கல்லூரியில் ஒன்றாகப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் நண்பர்கள். ஒரே மாதிரி உடுப்புப் போடுவதும், அலங்கரிப்பதும், ஒன்றாகவே பேரூந்தில் பயணிப்பதும், பட்டாம்பூச்சிகள் போல பறந்து திரிவதுமான வாழ்க்கை அப்போது.
“எடியேய் சிந்து, எத்தினை தரமடி நீ அப்ப கேசவனுக்குத் துப்பி இருப்பாய்… எல்லாத்தையும் சகித்துக் கொண்டு, துஷ்யந்த மகாராஜா சகுந்தலையைத் தூக்கிக் கொண்டு ஓடினமாதிரி, கடைசியில் கேசவன் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான் தானே!”
Monday 17 May 2021
விடியல் இலக்கிய இதழ் நடத்தும் உலகளாவிய சிறுகதைப்போட்டி 2021.
விடியல் இலக்கிய இதழ் நடத்தும் உலகளாவிய சிறுகதைப்போட்டி 2021.
கதைகள் சமூக நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கலாம். தயவு செய்து கொலை,ஆபாசம் வேண்டாம்.
1000 வார்த்தைகளுக்கு மிகாமல் யுனிகோட் எழுத்துருவில் ஏற்கனவே பிரசுரமாகாத,புதிய கதைகளை அனுப்ப வேண்டும். கதைப்பிரதியை தபாலிலும் சொந்தக் கற்பனையே என்ற உறுதிமொழியோடு கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
புத்தம்புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் வரவேற்கிறோம்.
முத்தான மூன்று பரிசுகள் உண்டு. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் சில கதைகளுக்கும் பரிசு உண்டு.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
வாழ்த்துகள்
...!
கடைசி தேதி: 31.05.2021.
vidiyalilakkiyaithaz@gmail.com
ஆசிரியர்,
விடியல் இலக்கிய இதழ்,
32, வழுதாவூர் சாலை,
பேட்டையான்சத்திரம்,
தட்டாஞ்சாவடி அஞ்சல்,
புதுச்சேரி 605 009.