Monday 27 September 2021

உலா - எனக்குப் பிடித்த கதை

 
.சட்டநாதன்

அம்மாவின் மடியில் தலைவைத்துஉடலைச் சீமெந்து தரையில் கிடத்திகால்மேல் கால் போட்டுப் பெரிய மனிசத் தனத்துடன், மது தனது ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத்தை அவளுக்கு உரத்துப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்.

சாப்பாடு ஆனதும், இப்படி ஒரு சொகுசும், படிப்பும் அவனுக்குத் தேவைப்படுவது அம்மாவுக்குத் தெரியும்.

அவள், அவனது தலையை வருடியபடி அவனது படிப்பில் ஆழ்ந்திருந்தாள். அப்பொழுது, வெளியே அழுத்தமான அந்தக் குரல் கேட்டது.

'மாமா...!'

மிக மெதுவாகக் கூறியவன், எழுந்துஉறைந்துபோய் உட்கார்ந்தும் கொண்டான்.

புத்தகம் மடங்கித் தூரத்தில் கிடந்தது. அம்மா வெளியே வந்து மாமாவுடன் கதைத்தாள்.

Wednesday 22 September 2021

நவகண்டம் - எனக்குப் பிடித்த கதை

  
ரஞ்சகுமார்

நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

"முப்பது ஆண்டுகள்' என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத் தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் முப்பது ஆண்டுகளுக்குள் தம்மைத் தாமே கொன்று விடுகிறார்கள். அல்லது பிறரால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அத்துடன் தமிழர்களின் விடுதலைப்போரை அக்குவேறு ஆணி வேறாய் அலசுபவர்கள் "முப்பது ஆண்டுகால' சாதனைகளையும் வேதனைகளையும் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.
அதைவிட முக்கியமானது, இந்த வீரநாயகன் கொல்லப்படும்போது அவனுக்கு முப்பது வயது நிறைந்திருந்தது. ஆகவே மேலும் முப்பது ஆண்டுகளை இந்தக் கதை கொண்டிருக்கிறது. அதாவது அறுபது ஆண்டுக்கால வரலாற்றினூடாக நாம் பயணம் செய்யப்போகிறோம். இந்த அழகிய சிறு மரகதக் தீவின் வரலாற்றை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து எழுதுபவர்கள், "அறுபது ஆண்டுக் காலம்' என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து ஆராய்வார்கள்.

Tuesday 14 September 2021

இலக்கியவெளி சஞ்சிகை - அறிமுக விழா அழைப்பிதழ்


நாள்: ஞாயிற்றுக்கிழமை 26-09-2021


இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 9.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30


வழி: ZOOM செயலி, Facebook

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09


Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316

Tuesday 7 September 2021

தி.ஞானகிராமனும் சினிமாவும்

 


முருகா முருகா முருகா.....

வருவாய் மயில் மீதினிலே

வடிவேலுடனே வருவாய்

தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறமும் தனமும் கனமும்

முருகா முருகா முருகா.....

இந்தப் பாடலை நான் சிறுவயதில், சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் கேட்டிருக்கின்றேன். லண்டனில் இருக்கும் முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் மிகவும் அழகாக அதைப் பாடியிருந்தார். இற்றைவரைக்கும் இந்தப் பாடல் அந்த நிகழ்ச்சியில் தான் முதன்முதலாகப் பாடப்பட்டது என்றே நினைத்திருந்தேன். ஆனால் `நாலு வேலி நிலம்’ என்ற திரைப்படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராயன் ஏற்கனவே பாடியிருக்கின்றார். பாடலை எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.

Wednesday 1 September 2021

காணவில்லை - எனக்குப் பிடித்த கதை

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

அந்தி வேளை. ஒளி மரணத்தின் பிடிக்குள் மெல்ல மெல்ல இழுக்கப்பட, இருள் தன் சிறகுகளை விரித்துப் பரப்பிக் கொண்டிருந்தது.

அன்னமுத்தாச்சி, ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டியபடி நிலத்திலிருந்தவாறு சுட்டெடுத்த பனம்பழத்தை தோல் நீக்கி பினைந்து பனங்களி எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.

சுமார் எண்பத்தைந்து வயது மதிக்கத்தக்க தளர்வுற்ற சிறிய உருவம், இளமையில் அழகியாக இருந்திருப்பாள் என்று ஊகிக்கவைக்கும் தோற்றம்.

“சஞ்சீவன், மேனை சஞ்சீவன், ஆட்டோவுக்குச் சொல்லிப்போட்டியோ?”

வீட்டின் உட்புறம் நோக்கி உரத்தகுரலிலே ஆச்சி கேட்டாள்.

ஓம் பாட்டி சொல்லிப்போட்டன், காலமை எட்டரை மணிக்கு வரும்உள்ளேயிருந்து சஞ்ஜீவனின் பதில் வருகிறது.

அடுத்த வருசம் இருக்கிறனோ இல்லையோ? இந்த வருசம் திருவிழாவிலை ஒரு நாளைக் கெண்டாலும் போய் முருகனைத் தரிசிச்சிட வேணும்.

அவளது இருப்பைப் பற்றி அவளுக்கிருக்கும், ஐயத்தின் காரணமாக

திருவிழாக் காலத்தில் முருகனைத் தரிசித்துத் தொழுவதற்காகவே இந்த மூவுருளிப் பயண ஏற்பாடு.