Friday 9 June 2023

மாயாவதியின் கனவு - எனக்குப் பிடித்த சிறுகதை



செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்)

‘புரிந்துணர்வுப் போர்நிறுத்தம்’, ‘தற்காலிகப் பேச்சு வார்த்தை’, ‘புலிகளே முன்வரும் போர்நிறுத்தம்’, ‘இனி வடக்குக்கும் போய் வரலாம்’, ‘ஏ – 9 பாதை திறப்பு’, ‘ஆஹா! இனி வடக்குக்கும் தெற்குக்கும் இடையே போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை…’, ‘நாகதீபத்துக்குச் சென்று எத்தனை வருடங்களாகிவிட்டன’, ‘அந்தப் புத்த பகவானின் கருணை விழிகளின் முன்றலிலே அன்றலர்ந்த வெண்தாமரைகளாகிப் பனித்துளி மின்னக் கிடந்த காலைப் பொழுதுகள் தான் எத்தனை……?’ ஆத்மலயமும், சுருதியும் பிரபஞ்ச வெளியில் மோனரகஸ்யங்களுடன் ஒன்றி… ஒரே வெளிச்ச வீட்டில் வாசம் செய்த புலரிகள்தான் என்ன சுகமானவை!

மாயாவதி கனவுகளில் ஆழ்ந்து போனாள்.

‘அம்மே!…. அம்மே!…’ – யாரோ உலுக்கி எழுப்புகிறார்கள்.

மகன் கருணாரத்ன வாலிப மிடுக்குடன் நிற்கிறான்.

‘ஆ!… எவ்வளவு வளர்ந்து விட்டான்!…’ அவனையே வைத்த விழி மூடாமல் ஆர்வத்துடன் பார்த்தாள். அவன், யாழ்ப்பாணத்தில் இருந்து வீட்டைத் துறந்து, பேக்கரியை விட்டு, எல்லாவற்றை யும் குடும்ப நண்பர்…. சிவப்பிரகாசத்திடம் ‘என்ன செய்வியோ ?… ஏது செய்வியோ….. எல்லாம் உன் பொறுப்பு!’ என்று ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டபோது இவன் கைக்குழந்தை. இவன் அழுதபோது ‘அம்மா’ என்றது இப்போது ஞாபகம் வருகிறது. ஆனால், இன்றோ ….?

Friday 2 June 2023

எனக்கு வேணும்


பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.