Thursday 26 October 2023

நினைவில் நின்றவை - சிறுகதை ஒலிவடிவம்

 

நன்றி : சொல்வனம்

ஒலி வடிவம் - சரஸ்வதி தியாகராயன்

Wednesday 25 October 2023

நினைவில் நின்றவை – சிறுகதை

 

சோஷல்

மஞ்சு சில வருடங்களாக புற உலகில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாள். எந்தவொரு நிகழ்விற்கும் அவள் விரும்பிப் போவதில்லை. யாருடனும் பழகுவதுமில்லை.

கொழும்பில் மகன், மருமகள், பேரப்பிள்ளையுடன் இருந்த காலங்களில் அவள் தனிமையை உணர்ந்ததில்லை. மகனுக்கு சின்சினாட்டிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது அவள் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டாள். மகனின் எதிர்காலம் கருதி, வற்புறுத்தி அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள். அதன் பின்னர் ஊருக்குத் திரும்பி, போரினால் சிதிலமடைந்திருந்த தனது வீட்டைத் திருத்தி அங்கேயே தங்கிக் கொண்டாள். தனது அந்திமகாலம் அங்கேயே கழிய வேண்டும் என்பது அவள் விருப்பம். பொழுதுபோக்குக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கம்பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுப்பாள்.

ஒருநாள் மதியம், “எயிற்றி ரூ பட்ச் கெற்றுகெதர் வைக்கப் போகின்றோம்” என்று சொல்லியபடி நந்தனும் முரளியும் அவளின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவளும் நந்தனும் எல்லாப் பிரச்சினைக்குள்ளும் இலங்கையில் தான் இருக்கின்றார்கள். முரளி கனடாவிலிருந்து ஒன்றுகூடலை ஒழுங்கு செய்யவென வந்திருந்தான்.

“இது ஒரு காலங்கடந்த ஒன்றுகூடல் எண்டு நான் நினைக்கிறன். இருபது இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முந்திச் செய்திருக்க வேணும் முரளி…”

நாற்பது வருடங்கள் கழித்து ஒரு ஒன்றுகூடல் தேவையா என்பது மஞ்சுவின் மனதில் பெருங் கேள்வியாக எழுந்தது. முரளி தலைக்குள் கையை வைத்துக் கோதினான்.

“செய்யக்கூடிய நிலையிலையா அப்ப நாடு இருந்தது. யுத்தம் முடிஞ்ச கையோடை செய்திருக்க வேணும். எங்கை… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சோலியள். ஒவ்வொரு நாட்டிலையும் போய் ஒளிஞ்சிருக்கிற ஆக்களைத் தேடிப்பிடிச்சு ஒண்டாக் கொண்டுவாறதெண்டா சும்மா லேசுப்பட்ட காரியமா?” என்றான் நந்தன்.

“ஆர் ஆர் வருகினம்? வாற ஆக்களின்ரை லிஸ்ற் இருக்கோ?”

Tuesday 24 October 2023

பால்வண்ணம் சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு




பால்வண்ணம் சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வானது  2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு வவுனியா நகரசபைப் பொதுநூலகத்தில் பண்டாரவன்னியன் புத்தகசாலையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்விற்கு தமிழருவி .சிவகுமாரன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். மேலும் கொ.பாபுஏழாலை அகரா ஆகியோர் நூல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தார்கள். நேற்றைய தினம் புத்தக ஆர்வலர்கள் சூழ அருமையான பொழுதாக இருந்தது. இளையோர்களும் அறிஞர்களுமாக தமது கருத்துகளை வழங்கிருந்தார்கள்.




தகவல் - பண்டாரவன்னியன் புத்தகசாலை

Sunday 15 October 2023

`பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுப்பு அறிமுகம்


எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவர்கள் எழுதிய 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பானது 2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நமது வவுனியா நகரசபைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் அறிமுக நிகழ்வாக இடம்பெறவுள்ளது. இலக்கிய விரும்பிகளை அன்போடு அழைக்கிறோம்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,எங்கே போகிறோம்,மெல்பேர்ண் வெதர்,கார்காலம்,ஏன் பெண்ணென்று,வளர் காதல் இன்பம் ஆகியன இவரது பிற நூல்களாகும். தொடர்ந்து இலக்கியங்களோடு செயற்பட்டுவரும் இவரது எழுத்துகளின் வாசனையை நுகர்ந்துகொள்ள நமது எழுத்தாளர்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்.

புத்கங்களோடு இயங்குதலொன்றையே பெருங்கனவாகக்கொண்டு இயங்கிவரும் பண்டாரவன்னியன் புத்தகசாலையின் ஒன்பதாவது நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வுக்கு அனைவரும் வாருங்கள். திரையரங்கு செல்கையில் பிள்ளைகளை எவ்வாறு ஆர்வமாகவும் சந்தோசமாகவும் அழைத்துச் செல்கின்றீர்களோ அதுபோல இவ்வாறான நிகழ்வுகளுக்கும் உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள்.
சிந்திப்பவர்கள் சிறப்படைவார்கள். வாங்க மக்கா!

பண்டாரவன்னியன் புத்தகசாலை / 0772244616