Wednesday 22 January 2020

"ஆஸ்திரேலியா - பல கதைகள் 2019" கதைப்போட்டி முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம்,


குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம் நடத்திய 2019 ஆண்டுக்கான 'ஆஸ்திரேலியா பல கதைகள்' சிறுகதைப்போட்டிக்கு,
பெரியவர்கள் பிரிவில் 13 கதைகளும்,
இளையவர்கள் பிரிவில் 12 கதைகளும் வந்திருந்தன.

இதில் பெரியர்வர்கள் பிரிவில் நான்கு கதைகளுக்கும், இளையவர்கள் பிரிவில் 10 கதைகளுக்கும், பரிசுகள் வழங்கப்படுகின்றன.


பெரியவர்கள்


சிறப்புப் பரிசு: பெறுபவர் "சரசன்" எனும் ராஜப்பா


முதல் பரிசு: சுதாகரன் செல்லதுரை; கதை: தலைமுறை தாண்டிய தரிசனங்கள்

இரண்டாம் பரிசு: சியாமளா யோகேஸ்வரன்; கதை: நட்பும் ஒரு வரமே


மூன்றாம் பரிசு: சோழன்; கதை: நிழலா நிஜமா?

Sunday 12 January 2020

ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்


 

இந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன் ராஜசிங்கம் அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம் ஆண்டு   வந்திருந்தது. அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள்  என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால மூலதனம், அரசியல் ஆவணம்.

Wednesday 8 January 2020

வேர்களைத் தேடும் விழுதின் பயணம்


பகுதி (2)

இப்படித்தான் மலைக் கிராமமான ஜுஃப்பூரில் இயல்பு  வாழ்க்கை நடத்தி வந்த குண்டா கிண்டே தனது பதினேழாவது வயதில் பிடிபடுகின்றான். காடொன்றில் தனது தம்பிக்கு முரசு செய்வதற்கு மரம் வெட்டிக்கொண்டிருந்த வேளை ஆப்பிரிக்கக் கைக்கூலிகளிடம் அகப்பட்டுக் கொள்கின்றான். ஆண் பெண் பேதமின்றி அடிமையாகப் பிடிக்கப்பட்டவர்களை அம்மணமாக்கி - உடல் உறுப்புக்களைப் பரிசோதித்து – மாட்டுக்கு குறி சுடுவது போல நெருப்பினால் அடையாளமிட்டு கப்பலில் ஏற்றினார்கள். சொற்ப உணவு, சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட வாழ்க்கை. பாலியல் வல்லுறவு, தமது மலசலத்தின் மேலே இருப்பு. மனதைப் பதற வைக்கும் நான்கரை மாதங்கள் கடல் பயணம். கப்பல் அமெரிக்காவில் உள்ள நேப்பிள்ஸ் என்ற இடத்தைச் சென்றடைந்ததும், அவர்கள். உடல்வாகுக்கு ஏற்றபடி ஏலம் கோரப்பட்டார்கள்.

Thursday 2 January 2020

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2019


முதல் பரிசு - வியாபாரிகள் – அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா
இரண்டாம் பரிசு : தப்பு தான் – சத்யானந்தன், சென்னை.
மூன்றாம் பரிசு - நில் – முத்துச்செல்வன்


கூடுதல் பரிசுகள்:
================
1. தேசவிரோதியின் மிஞ்சிய குறிப்புகள் - அ.கரீம், கோவை
2. அவள் ஒரு பூங்கொத்து - தேவகி கருணாகரன், ஆஸ்திரேலியா.


சான்றிதழ் பெறும் கதைகள்:
====================
1. தாய்க்கோழி - சோ.சுப்புராஜ், சென்னை.
2. விவசாயி கனவு - பா. ஏகரசி தினேஷ், திருச்சி
3. மனசு – தங்கேஸ், சின்னமனூர்.
4. கடவுளின் சாயல் - ஐ.கிருத்திகா, திருச்சி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
தேனி மாவட்டக்குழு.

Wednesday 1 January 2020

வேர்களைத் தேடும் விழுதின் பயணம்




பகுதி (1)

ஒருமுறை நண்பன் ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினான். தனது மகன் பாடசாலையில் `ஃபமிலி றீ’ பற்றி ஒரு செயல்திட்டம் செய்வதாகவும், தன்னுடையதும் மனைவியினதும் இரண்டாவது பரம்பரைக்கு அப்பால் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாகவும் கவலை கொண்டான்.

“உனது குடும்பத்தில் எந்த எல்லை வரை உன்னால் சொல்ல முடியும்?” திடீரென என்னிடம் கேட்டான் அவன். குடும்பத்தின் ஆணி வேரைக் கண்டிபிடித்து விடவேண்டும் என்பதில் அவனது ஆர்வம் உச்சத்துக்கே சென்றுவிட்டதை அவதானித்தேன். அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி நானும் என் குடும்பத்திற்குள் பயணித்தேன். மூன்றாவது பரம்பரைக்கு அப்பால் என்னால் நகர முடியவில்லை.

இந்த உரையாடலின் பின்னர், இதுவரை காலமும் வாசிப்பதற்கு பின் போட்டுவந்த அலெக்ஸ் ஹேலியின் `வேர்கள்’ நாவலைக் கையில் எடுத்தேன். `எதிர் வெளியீடாக. வந்திருக்கும் இந்த நாவலை 2018 இல் இந்தியா சென்றபோது வாங்கியிருந்தேன். இந்தப் புத்தகத்தின் பருமன் தான் இத்தனை நாளும் என்னை வாசிப்பதற்குப் பயம் காட்டியிருந்தது. ஏறக்குறைய 910 பக்கங்கள். எல்லாவற்றையும் புறம் தள்ளி ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். பொன். சின்னத்தம்பி முருகேசனின் அழகு தமிழ் என்னை அசைய விடாமல் கட்டிப் போட்டிருந்தது.