Thursday 18 January 2018

உதவிக்கு ஒருவன், உளறுவதற்குப் பலர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

இரவு வேலைக்கு வரும்போது நண்பன் ராமின் கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. மனைவி தனது காரில் அவனை வேலை செய்யுமிடத்திற்குக் கூட்டி வந்திருந்தாள்..

அவனது நாட்டவர்கள் சூழ்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
வேலை தொடங்கிவிட்டமையால் விபரம் அறிய முடியவில்லை. அவனும் எனக்கொன்றும் சொல்லவில்லை.
ஓய்வு கிடைத்தபோது என்னிடம் வந்தான்.

“ஒருகிழமைக்கு வேலை முடிய என்னை வீட்டில் கொண்டுபோய் விடுவாயா நண்பனே? வரும்போது மனைவியுடன் வருவேன். நள்ளிரவில் மனைவியைக் கூப்பிட தயக்கமாக உள்ளது.”



1 comment:

  1. அருமையான கதை. சமூகம் இப்படித்தான் உளறும் பலவாறு.

    ReplyDelete