Friday 24 April 2020

அம்பு எய்தவர் மீதே அது பாயும் - கங்காருப் பாய்ச்சல்கள் (32)



ஒருவர் –

தான் உண்டு, தன் பாடு உண்டு என்பவரைப் பார்த்து -


ஏன் எனக்கு வரும் சோதனைகள், துன்பங்கள் இவருக்கு வரவில்லை, ஏன் என்னைப் பற்றி அவதூறுகள் சொல்பவர்கள் இவரைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை என்று பொறாமை கொள்கின்றார். வேண்டும் என்றே அவரைப் பற்றியும் கதைகள் பல சொல்லி அவரையும் தன்கூட்டத்துக்குள் சேர்த்து கும்மாளமிட நினைக்கின்றார்.

மனிதர்கள் அந்த நல்லவரைப் பற்றி அறிந்திருந்தாலும், மனதில் சஞ்சலம் கொள்ளுமளவிற்கு அந்த ஒருவரின் பரப்புரைகள் இருப்பதால், ஒருவேளை அவர் சொல்வது சரியாக இருக்குமோ என ஐயம் கொள்கின்றார்கள்.

`நான் நானாக இருக்கவே ஆசைப்படுகின்றேன். அவர்கள் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டுமே!’ என விட்டுவிடலாமா? ஒன்றும் சொல்லாது மெளனமாக இருந்தால் சம்மதம் என்றாகிவிடும் அல்லவா. இவர்களை எதிர்த்து நிலைகொள்வதற்கு நாளும் பொழுதும் சக்தியை வீண் விரயம் செய்யவேண்டி உள்ளது. எவ்வளவோ செய்வதற்கு இருக்கும்போது நேரத்தை வீணாக இவர்கள்மீது செலவிடவேண்டி உள்ளது.

புரிந்து கொள்ளுங்கள்.

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில்லை. சிலர் நமக்கேன் வம்பு என்று தாமாகவே ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் வரிஞ்சு கட்டி சண்டைக்கு இழுத்து, நடுச்சந்தியில் வேட்டியை உரிந்து நாற வைத்து வெளியே அனுப்புவார்கள்.

உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை என்பதை அறியவரும்போது எய்தவர் மீதே அம்பு பாய்கின்றது. அப்பொழுது சுடச்சுட அவர்களுக்குக் பலாபலன்களும் கிடைத்துவிடுகின்றது.

No comments:

Post a Comment