Saturday, 1 February 2025
`கிழக்கினை எதிர்கொண்டு’ - கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
இலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புகள் தற்போது வரட்சியான நிலையிலேயே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் எஸ்.பொன்னுத்துரை, சோ.பத்மநாதன், சி.சிவசேகரம், ரூபராஜ் தேவதாசன் போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பரவலாக வந்துகொண்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில், தமிழ் மொழிபெயர்ப்புகள் கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதிய முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ரிஷான் ஷெரீப், கெகிறாவ ஸுலைஹா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இதில் ரிஷான் ஷெரீப் வேகவேகமாக பல மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகின்றார். கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புகளில் ஒரு ஒளிக்கீற்றாக `கிழக்கினை எதிர்கொண்டு’ என்ற இந்தப் புத்தகம் விளங்குகின்றது. இதன் தலைப்புக் கூட சூழ்நிலைக்கேற்றவாறு அற்புதமாகவே தோன்றுகின்றது.
ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்த படைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.
பின் இணைப்பாக தொகுப்பில் வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் மூலம், நமக்கு அவர்களைப்பற்றிய பின்னணியையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.. கூடவே `மொழி மாறி வந்த பிரதிகளும் அவை பேசும் அரசியலின் பொதுமையும்’ என்ற தலைப்பில் மேமன்கவி அவர்களின் பின்னுரையும் இடம்பெற்றுள்ளது.
Subscribe to:
Posts (Atom)