ஜெர்மனியில் வசிக்கும் கெளசி (சந்திரகெளரி சிவபாலன்) அவர்களின் நாவல் `குருவிக்கூடு’. பொதுவாக நாவல்களைப் படிக்கும்போது முன்னுரை அணிந்துரை என்னுரைகளை இறுதியில்தான் படிப்பேன். இந்த நாவலையும் அப்படித்தான் வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்கத் தொடங்கிய ஆரம்பப் பக்கங்களிலேயே இது ஒரு கற்பனை நாவல் அல்ல என்பதையும், நாவல் ஆசிரியரும் சிநேகாவும் ஒருவரே என்பதையும் புரிந்து கொண்டேன்.
இலங்கை வாழ்க்கை, ஜெர்மனிய வாழ்க்கை என இந்த நாவலை இரண்டு பாகங்களாகப் பார்க்கலாம். இலங்கையில் இருக்கும் ஏறாவூர், பேராதனை, நீர்கொழும்பு என்ற இடங்களில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஜேர்மனியை நோக்கி நாவல் பயணிக்கின்றது.
முதலில் நாவலின் சுருக்கத்தைப் பார்க்கலாம். கந்தசாமி வைரவள்ளி தம்பதிகளின் மகளான பார்வதியை பரமசிவம் மணந்து கொள்கின்றார். அவர்களின் நான்கு பிள்ளைகளான சிவம், சிநேகா, கீரன், சிந்து என்பவர்களைச் சுற்றி கதை ஆரம்பத்தில் பின்னப்பட்டுள்ளது. தாத்தா பாட்டியுடன் வாழ்வதற்கு பலருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இங்கே சிநேகாவிற்கு பாட்டி வாய்த்துவிடுகின்றது. பாட்டி வைரவள்ளி மட்பாண்டங்கள் செய்தல், கை வைத்தியம், முறிவு வைத்தியம், பிள்ளைப்பெற்று பார்த்தல் போன்றவற்றில் கை தேர்ந்தவளாக இருக்கின்றார்.
Friday, 10 October 2025
Sunday, 5 October 2025
Wednesday, 1 October 2025
Subscribe to:
Posts (Atom)