Friday, 4 December 2015

ஆழியாள் மதுபாஷினி




  


திரும்பிப்பார்க்கின்றேன்

திருகோணமலையிலிருந்து  அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன்   பயணித்த  ஆழியாள் மதுபாஷினி

அவுஸ்திரேலியாவின்  ஆதிக்குடிகளின்  துயர்மிகு வாழ்வின்  பக்கங்களை   தமிழுக்கு  அறிமுகப்படுத்தியவர்

தமிழர்  வாழ்  நிலங்களில்  புதிய  பரிணாமமாக  ஆறாம் திணையை   ஆய்வுக்குட்படுத்தும்  ஆளுமை

                                 முருகபூபதி

பால்ய காலத்தில் அவுஸ்திரேலியாவை   அப்பிள்  பழங்களின்  ஊடாகத்தான் அறிந்துகொண்டேன்.

Thursday, 3 December 2015

அகதியும் அதிதியும்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 1

தேவன் ஒருவாறு கனடா வந்து சேர்ந்து விட்டான். அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது.

பல நாட்கள், நாடுகள். பட்ட கடனை அடைத்து, ஏழு வருடங்களில் தகப்பனாரைக் கூப்பிட்டான்.

வந்த மறுவாரம் தகப்பனிற்கும் மகனிற்கும் சண்டை.

”நான் என்ன உன்னைப் போல அகதியாகவா வந்தனான்? எயாப்போட்டிலை எனக்கு இருந்த வரவேற்பு. வெல்கம் ரு கனடா எண்டு சொல்லித்தானே உள்ளேயே விட்டவன்” என்றார் தந்தை.

Wednesday, 2 December 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (8)

Anybody there?

வீடு ஒன்று வாங்குவதற்காக மெல்பேர்ணின் மேற்குப்பகுதிகளில் அலைந்து திரிந்தேன். எனக்குப் புதுவீடு கட்டுவதில் இஸ்டமில்லை. என்னால் முடியாது. நான் ஒரு சோம்பேறி. யாராவது கட்டிய வீட்டை வாங்கி அதை அழகுபடுத்துவதில்தான் பிரியம் எனக்கு.

பார்க்காத வீடுகள் இல்லை. போகாத இடங்கள் இல்லை. ஓரளவிற்குப் பிடித்துக் கொண்டுவிட்டால், மகனையும் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுவோம். பாடசாலையில் இருந்து மகனைக் கூட்டிக்கொண்டு வரும்போது அந்த வேலையைச் செய்வோம். அப்போது மகனுக்கு 13 வயதிருக்கும்.

ஒரு றியல் எஸ்றேற்றில் வேலை செய்யும் வியட்நாமியனுடன் கொஞ்ச நாட்கள் அலைந்து திரிந்தேன். ஒருநாள் அவனுடன் Burnside Heights என்னும் இடத்தில் உள்ள வீட்டைப் பார்ப்பதற்காகச் சென்றோம். பாதை வளைந்து வளைந்து ஓடியது. வீடுகள் பெட்டிகள் போல கட்டம் கட்டி நின்றன.

அந்த வீட்டிற்கு முன்னால் ஒரு கார் நின்றது. எங்களைக் கூட்டிச் சென்ற வியட்நாமியன் அந்த வீட்டுக் கராஜைத் சடசடவெனத் தட்டி,

Anybody there?

Tuesday, 1 December 2015

வன்னி நாவல் பற்றிய என்பார்வை - எம். ஜெயராமசர்மா

             

        வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.  பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையானது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்றுவிடும்.பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்" வன்னி '  நாவல் அப்படியானதன்று.தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும்.
    மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப் பட்டிருக் கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருபக்கச் சார்பானதாகும்.
     வன்னி நாவலையும் தமிழரின் மஹாவம்சமாகவே நான் பார்க்கின்றேன். ஆனால் பழைய மஹாவம்சத்துக்கும் இதற்கும் பாரியவேறுபாடு.வன்னி நாவல் உண்மையை சொல்லி நிற்கிறது.ஊத்தைகளையும் காட்டுகிறது.உலுத்தர்களை யும் காட்டுகிறது.எல்லாவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது.இது இந்த நாவ லின் சிறப்பு எனலாம்.