Tuesday 22 March 2016

அறிவுரை இலவசம்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 15

கணேசராசா  ஒரு சிகரெட் பிரியன். தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பான். யாராலும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது.

ஒருமுறை எனக்குக் காய்ச்சல் வந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து பனடோல் எடுத்தேன்.

“பனடோல் உடம்புக்குக் கூடாது. தொடர்ந்து குடித்தால் உடம்பு அதற்கு இசைவாக்கம் அடைந்துவிடும். பிறகு ஒரு நாளும் காய்ச்சலுக்கு பனடோல் வேலை செய்யாது” சிகரெட் புகையை இளுத்து இளுத்து வளையம் விட்டபடியே உபதேசம் செய்தான் கணேசராசா.



No comments:

Post a Comment