Friday 26 March 2021

விநோத உடைப் போட்டி - கங்காருப் பாய்ச்சல்கள் (36)

விநோத உடைப்போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தில்---ஓரிரு மணித்துளிகளோ அல்லது ஒரு நாளோ---நடைபெறும். அப்போட்டியில் கலந்து கொள்பவர்கள், தாம் தெரிவு செய்த பாத்திரங்களாக மாறி பார்வையாளர்களை அசத்துவார்கள். போட்டி முடிகையில் அவர்கள் தங்கள் வேடங்களைக் கலைத்து விடுவார்கள்.

வாழ்க்கையில் சிலர், ஒரு குறிப்பிட்ட காலத்தை அடைந்ததும் வேடங்களை அணிந்து கொள்கின்றார்கள். கூடியவரை அவர்கள் தமது அந்திமகாலம் வரையிலும் அந்த வேடங்களைக் கலைப்பதில்லை. பெரும்பாலும் தமது ஆசாபாசங்கள் நிறைவேறியதும், தங்களால் இனி ஒன்றும் முடியாது என்றபோதும் – ’அந்திமகாலம்’ அவர்களைப் புடம் போட்டுக் கொள்ளும். அந் நிலையில் அவர்களின் வேடங்கள் கலைந்து விடுகின்றன. வேடத்தைக் கலைக்காமல் வீறாப்புடன் சென்றவர்களும் உண்டு.

 

No comments:

Post a Comment