Friday 10 February 2023

பால்வண்ணம் - எழுத்தாளர் வாசு முருகவேல் கருத்து

 



பால்வண்ணம் - சிறுகதைகள் - கே.எஸ்.சுதாகர்

புலம்பெயர்வாழ்வின் துயர்கள், அபத்தங்கள் என்று அலைக்கழியும் வாழ்வில் அசைபோட மிஞ்சி இருபது ஊரின் நினைவுகள் தான். ஏதோவொரு வகையில் ஊர் ஒரு வார்த்தையாக வந்து விழுவதை தவிர்க்க முடிவதில்லை. எத்தனை நெருக்கடி இருந்தாலும் ஊர் பிரியாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லாத நபர்கள் குறைவுதான்.

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் நிதானமானவை. காதலை கூட இவ்வளவு நிதானமாக கையாண்டா ஒரு தலைமுறையை இப்போது படிக்கும் போது துல்லியமாக புரிந்து கொள்வது கடினமாகத்தான் இருக்கும். அவருடைய எந்தச்சொற்களிலும் அதிர்வுகள் இல்லை. ஒருவகையில் அந்த அமைதிதான் வாசிப்பில் சற்று நம்மை நிலைகுலைய வைத்து விடுகின்றது.

1983 காலப்பகுதியில் இருந்து எழுத்து துறையில் இயங்கி வருபவர் கே.எஸ்.சுதாகர் என்று குறிப்புகள் கூறுகின்றது. இந்த தொகுப்பின் சிறுகதைகள் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவையாகும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்கத்தொடங்கி மன நிறைவுடன் வாசித்து முடித்திருக்கிறேன்.

- வாசு முருகவேல்

02/02/2023

No comments:

Post a Comment