போட்டி அறிவிப்பின்போது ஆறுதல் பரிசுகளாக 2,000 ரூபாய் அறிவித்திருந்தோம். அந்தத் தொகை இப்போது ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது.
அதேபோல் 3 நாவல்களுக்கு மட்டுமே 2000 ரூபாய் என்று அறிவித்திருந்தோம் இப்போது அது 5 நாவல்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்தப் புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும்.
இந்தப் போட்டிக்கு மொத்தம் 34 நாவல்கள் வந்தன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
மிக முக்கியமான நன்றியறிவித்தலை செய்ய வேண்டிய நேரம் இது. கலந்துகொண்ட நாவல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாவல்களைப் படித்துத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற நாவல்களை அறிவித்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே என் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் செய்த பணிக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது. எங்களை அலைக்கழிக்க விடாமல், சொன்ன தேதியில் தன் பணியைச் சிறப்பாக முடித்துக் கொடுத்த அவருக்கு என்றென்றும் எங்கள் நன்றி உண்டு.
சுவாசம் பதிப்பகத்திற்கு இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பை அளித்த ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கு நன்றி.
மற்ற விவரங்கள் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்படும்.
முதல் பரிசு:
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
பால கணேசன்
ரூ 50,000
-
2ம் பரிசு
ஆதினி
துரை.அறிவழகன்
ரூ 25,000
-
3ம் பரிசு
திரைகடலோடியும் புகலிடம் தேடு
வேலையா கார்த்திகேயன்
ரூ 10,000
-
ஆறுதல் பரிசுகள் - தலா 5000 ரூ
* சொல்லில் வருவது பாதி
கே.எஸ்.சுதாகர்
* உதிரக் காத்திருக்கும் ரோஜாக்கள்
ஷாந்தி பாலசுப்ரமணியன்
* குருதி ஓவியம்
சேரன் செக்குட்டுவன்
* மெய்யரசி
ஜெயந்தி கார்த்திக்
* பிரதி:வேலன்
முத்துச்செல்வன்

No comments:
Post a Comment