சொல்லில் வருவது பாதி – நாவல்
இலங்கைப் போர்ச் சூழலின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் இருபது வருட வாழ்வியலைப் பேசுகிறது நாவல்.இவர்கள் எந்த இயக்கத்தினையும் சாராதவர்கள். எந்தக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்காதவர்கள். சாதாரண மனிதர்கள். தங்கள் வாழ்க்கையை நேர்மையாக வாழ நினைப்பவர்கள்.
பதற்றமே அன்றாட வாழக்கையாக மாறுபடும் நிலையும், போர்ச்சூழலும் எவ்விதம் மக்களைப் பாதிக்கின்றன என்பதையும், இயல்பு வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாக மாறும் தருணத்தையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.
நம் கண்முன்னே கண்ட காட்சிகள் எவ்வாறெல்லாம் மாறுகின்றன என்பதைக் கதையின் ஊடே இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் கே.எஸ்.சுதாகர்.
இயல்பான மொழியும் நேர்மையான பதிவுமே இந்த நாவலின் பலம்.
வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற நாவல்.
சொல்லில் வருவது பாதி, கே.எஸ்.சுதாகர், ரூ 380, அட்டை ஓவியம்: ஓவியர் தமிழ், சுவாசம் வெளியீடு.


No comments:
Post a Comment