Saturday, 29 February 2020

தூரத்தில் தெரிகிறது - சிசு.நாகேந்திரன்



                இயமன் தூரத்திலிருந்துகொண்டே என்மேல் கண் வைத்துவிட்டான்.  ஆனால் அந்தத் தூரம்தான் எவ்வளவு என்று எனக்குத் தெரியவில்லை. தனது நாட்குறிப்பை எடுத்து அடுத்து எந்தெந்தத் திகதிகளில் யார்யாரின் முறை வருகிறது என்று புரட்டிப்புரட்டிப் பார்ப்பது தெரிகிறது.

Friday, 28 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்




பகுதி (3)

க் தி வழிபாடு
சக்திஎன்றால் (ஆங்கிலத்தில்) Energy
Potential energy - அடங்கியிருக்கும் சக்தி
Kinetic energy -  வெளிப்பட்ட சக்தி
சக்தியில்லாமல் உலகமோ, உலகிலுள்ள எந்த சீவராசிகளோ, பஞ்சபூதங்களோ எதுவும்  இயங்கமாட்டா.  ஒலி, ஒளி, வெப்பம், குளிர், மின்சாரம், மின்னணு, காந்தம்,  இணையம், சுழற்சி, இறுக்கநிலை  இவைகளெல்லாம் சக்தியின் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளேயாம். 
சிவபெருமான்கூட தனது சக்தியின் மூலமாகத்தான் படைத்தல், காத்தல், அருளல்,  மறைத்தல், அழித்தல் என்னும் ஐந்தொழிலையும் செய்கின்றார் என்கிறது சமயம். 

Thursday, 27 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்



பகுதி (2)

இஸ்டதெய்வ வழிபாடு
இவ்வுலகில் மானிடனாகப் பிறந்த எவரும் தமது வாழ்க்கையில் துன்பம், கஸ்டம், துக்கம் முதலியவற்றை அனுபவிக்க விரும்புவதில்லை. மனிதர்கள் தமது வாழ்நாள் முழுவதும் சுமுகமான, இன்பமான வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்கள்.

அத்தோடு, மறுபிறவியில் நம்பிக்கை ஊன்றியிருக்கும் இந்துமதம் போன்ற சமயங்களைச்    சார்ந்தவர்கள் தங்களுக்கு இப்பிறப்பில்மட்டுமல்ல, வரும் மறுபிறவிகளிலும்கூட நோய்நொடியற்ற சுபீட்சமான வாழ்வு கிடைக்கவேண்டுமென்பதற்காகவே  இப்பிறப்பில் தீவினைகள், பாபச்செயல்கள் முதலியவற்றைத் தவிர்க்கின்றார்கள்.

Wednesday, 26 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்


(பகுதி 1)

மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது
ஆதிகாலத்து மனிதனுக்கு அன்றாட தேவைகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அவற்றுள் முக்கியமானவை உணவு தேடி உண்பதும், ஆண்பெண் உறவுமாகும். இவைகளோடு அவனது வாழ்நாட்கள் கழிந்தன.
அன்றாடத் தேவைகளை வெற்றிகரமாகக் கையாளுகிறோம் என்று அவன் திருப்தியடைந்திருந்தான்.
வேறு தேவைகள் ஏற்படாதவரையும் அவன் வேறெதையும்பற்றிச் சிந்திக்கவில்லை.
ஆனால், காலப்போக்கில், தனது அன்றாட தேவைகள் உணவோடும் உறவோடும் நின்றுவிடவில்லை என்பதையும், மேலும் பல தேவைகளும் ஆசைகளும் மனிதகுலத்துக்கு உண்டு என்பதையும் அனுபவரீதியாக உணரத்தொடங்கினான். அதனால், படிப்படியாக அவனுடைய  தேவைகளும் ஆசைகளும் விரிவடைந்த அவனுடைய முயற்சிகளும் பலதரப்பட்டவையாகப்  பரிணமித்தன.