Monday 18 March 2024

குவிகம் குறும் புதினம் போட்டி முடிவுகள் (2024-25)

(குறும் புதினத்திற்கென்று தமிழில் வெளிவரும் ஒரே மாத இதழ்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

17.03.24  அன்று குவிகம் அளவளாவல் நிகழ்வில் திரு அரவிந்த் சுவாமிநாதன்  அறிவிப்பின் படி 

1. சங்கரி அப்பன்   – முதல் பரிசு  –    Rs.10000  – உறவின் மொழி

2.  மைதிலி நாராயணன் (ஷைலஜா )  – Rs. 6000 – இரண்டாம் பரிசு –                  கங்கை உள்ளம்.

3. அன்புக்கரசி ராஜ்குமார் – மூன்றாம் பரிசு  – Rs. 4000 – கொட்டு முரசே

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&குவிகம் குறும் புதினம் மாத இதழில் ஏப்ரல் 24 முதல் மார்ச் 25 வரை பிரசுரமாகும் கதைகளுக்கான போட்டி வழக்கம் போல் இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் துவங்கியது . டிசம்பர் 31 ஆம் தேதி போட்டிக்கான கதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 

இந்த ஆண்டு ,  மூன்று சிறந்த குறும் புதினங்களிற்கான பரிசுத் தொகை 10000 ,6000, 4000 ரூபாய் என்று அதிகரிக்கப்பட்டது. 

இந்த வருடம் 109 கதைகள் போட்டியில் பங்கேற்றன. 

முதல் சுற்று நடுவர்கள் , 

1. ராய செல்லப்பா 

2. சு வித்யா 

3. JC கல்லூரி மாணவர் குழு 

ஆகியோர் வந்திருந்த  கதைகளை அலசி ஆராய்ந்து அவற்றிற்கு மதிப்பெண் இட்டு அனுப்பி வைத்தனர். 

மூவருடைய மதிப்பெண்களையும் சராசரிப்படுத்தி 109 கதைகளில் முதல்  24 கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட   24 கதைகள்  மாதம் இரண்டு கதைகள் வீதம் நமது குறும் புதினம் மாத இதழில் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 25 வரை வெளிவரும். அதற்கான சன்மானம் 1000 ரூபாய் வழங்கப்படும். 

இவற்றுள்  மூன்று சிறந்த கதைகளுக்கு சன்மானத்திற்குப் பதிலாக சிறப்புப் பரிசுகள் 10000, 6000, 4000 ரூபாய்  வழங்கப்படும். 

அதைத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவில் வெளிவரும் ‘தென்றல்’ பத்திரிகையின் சென்னை ஆசிரியர்  அரவிந்த் சுவாமிநாதன் அவர்களை வேண்டிக் கொண்டோம். 

அவரது முடிவு 17 ஆம் தேதி நடைபெறும் குவிகம் அளவளாவல் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

பிரசுரிப்பதற்காகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கதைகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டுதல்கள்! 

போட்டியில் பரிசுகளை வெல்லப்போகும் 3 பேருக்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள் !

109 கதைகளில் 24 கதைகள் போக மீதமுள்ள 85 கதைகளை எழுதிய ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் கதை வெற்றி பெற்ற கதைகளைவிட எந்த விதத்திலும் குறைவானது அல்ல. வேறு பத்திரிகைக்கு அனுப்பினால் அவர்களுக்கு இதைவிட சிறந்த அங்கீகாரமும் பரிசுகளும் கிடைக்கலாம். அதனால் அவர்கள் தொடர்ந்து நம் குவிகம் அமைப்பிற்குத் தங்கள் ஆதரவைத் தர வேண்டுமென்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.  

 குவிகம் குறும் புதினம் 24-25 ஆண்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்

எண் பெயர் புனைப்பெயர் குறும் புதினம்

1 எஸ்.கௌரிசங்கர் எதிர்பாராதது
2 இலக்குவனார் திருவள்ளுவன் இளவல், குவியாடி விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்
3 சுஜாதா நடராஜன் நயன்தூக்கின்!
4 கல்பனா சன்யாசி சூப்பர் மார்க்கெட்
5 ராஜேஷ் வைரபாண்டியன் ஓணான் குழி
6 ஆர்.பாலஜோதி பாலஜோதி ராமச்சந்திரன் தாழம்
7 மைதிலி நாராயணன் ஷைலஜா கங்கை உள்ளம்.
8 கொற்றவன் பொன்னியின் காவலன்
9 அன்புக்கரசி ராஜ்குமார் கொட்டு முரசே
10 இராஜலட்சுமி பூமரப்பாவை
11 வசந்தா கோவிந்தராஜன் வேர்களும் விழுதுகளும்
12 சு. இராஜமாணிக்கம் அண்டனூர் சுரா செம்புலம்
13 வா.மு.கோமு மாடு மேய்க்கும் கரடியார்
14 இ.மணி அபிமானி இரண்டாவது இடம்
15 ஈ. ரா.மணிகண்டன் ஈ ரா இறைவன் பப்புன் பேராசிரியர்
16 ரா.ராஜசேகர் பியானோ வாசிக்கும் பூனை
17 மஞ்சுளா சுவாமிநாதன் கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு கொஞ்சம் பட்ஜெட்
18 எச். நஸீர் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் மனச்சிடுக்கு…
19 புவனா சந்திரசேகரன் மூன்று புள்ளிகள்
20 சங்கரி அப்பன் உறவின் மொழி
21 துரை. அறிவழகன் காத்தப்ப பூலித்தேவன்
22 கே.எஸ்.சுதாகர் நன்றே செய்வாய், பிழை செய்வாய்!
23 ஜமுனா ஜகன் மியாமி மிதவை
24 அஷ்ரப் பேகம் பெஷாரா குழலினிது யாழினிது

No comments:

Post a Comment