Friday, 26 September 2025

நாடோடிகள் - எனக்குப் பிடித்த கதை

 

கி.பி.அரவிந்தன் 

நேற்றென்று ஒருநாள் காலமாகிப்போக இன்றென்று ஒருநாள் விடிந்தது. அது ஒரு சனிக்கிழமை.

ஐந்தரை மணிக்கெல்லாம் விழித்துவிட்டேன். படுக்கையில் புரள்கின்றேன். எண்ணங்களும் பல வேறாய் உருள்கின்றன.

உடல் வெளிப்படுத்தும் இளஞ்சூட்டில் குளிர் காய்ந்தபடி அணைந்து உறங்கும் நானும் மனைவியும் உறக்கம் கலைந்த புரளலில் விலகினோம் போலும்.

விலகலிடையே குளிர் நிரவுகின்றது.

இருவரும் மீள மெல்ல அணைந்து கொள்கிறோம். இதமாக இருக்கின்றது.

குளிர் இறங்கிச் செல்கின்ற இளவேனிற் காலாந்தானானாலும் காலை நேரக்குளிரின் இறுக்கப்பிடி இன்னமும் தளரவில்லை. “மாசிப்பனி மூசிப் பெய்யும்" என ஊரில் சொல்வதுண்டுதான். பனியா இது? மூச்சையே உறையச் செய்யும் இக் குளிரின் வீச்சத்தை எப்படி அழைப்பது?

Tuesday, 23 September 2025

நிலவு குளிர்ச்சியாக இல்லை - எனக்குப் பிடித்த கதை



வடகோவை வரதராஜன்

இலண்டன் மாநகரத்தின் அமைதியான `தேம்ஸ்’ நதியில் பெளர்ணமி காலத்தில் படகுச் சவாரி செய்திருக்கின்றேன். வாஷிங்ரனின் `பொடோமோ’ நதிக்கரையில் பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்கிடையில் சில்வர் நைற் கவிதை படித்துக்கொண்டு நிலவில் நடந்திருக்கின்றேன்.

ஆனாலும் அங்கெல்லாம் என்மனம் வெறுமையுற்று ஏங்கிக் கொண்டே இருக்கும். தேம்ஸ் நதியில் படகுச் சவாரி செய்யும் போதெல்லாம் இங்கே கோப்பாய் கடற்கரையில் கைதடிப் பாலக் கட்டில் நான், பாலன், குவி, ஜோக்கர் எல்லோரும் வரிசையாய் இருந்துகொண்டு மினிக்கிவிட்ட தங்கத்தாம்பாளம் போல் கடல் நீரில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பத்தைப் பார்த்து,

      ”சிந்து நதியின் மிசை நிலவினிலே

      சேரநன் நாட்டிளம் பெண்களுடனே

      சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்”

என்ற கவிதையைப் பாடி மகிழ்ந்து மெய்மறந்திருந்த நினைவுகள் என் நெஞ்சத்தில் இனிய உணர்வுகளை உதிர்த்துவிடும்.

Wednesday, 17 September 2025

மிஸ்டர் பீன், தேங்காய், கத்தி

தணிகாசலத்திற்கு சார்லி சப்பிளினுக்கு அடுத்ததாக மிஸ்டர் பீனைத்தான் அதிகம் பிடிக்கும். மிஸ்டர் பீனின் நகைச்சுவைக் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். மிஸ்டர் பீன் ஒரு அங்காடிக்குச் செல்கின்றார். திடீரென்று தனது மேலங்கிக்குள் இருந்து ஒரு முழு மீனை எடுத்துக் கொண்டார். ஒரு பாத்திரம் ஒன்றினுள் போட்டு, அப்பிடி ஒரு சுழட்டு இப்பிடி ஒரு சுழட்டு விட்டு, மீனைத் தூக்கித் தூக்கிப் போட்டார். திருப்தி வந்தவுடன் சட்டியை எடுத்துக் கொண்டார். பின்னர் தனது பொக்கற்றுக்குள் இருந்து ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். `பீலர்’ ஒன்றை எடுத்து உருளைக்கிழங்கின் மேல்புறத் தோலை சீவிப்பார்த்து, திருப்தி வந்தவுடன் அதையும் எடுத்துக் கொண்டார்.

அத்துடன் தணிகாசலம் படத்தை இடையில் நிறுத்திக் கொண்டார்.

Tuesday, 9 September 2025

சியாவோ எனும் அதிகாலை நட்சத்திரம் – சிறுகதை

 

“சேர்… இன்று மாலை நான் உங்களைச் சந்திக்கலாமா?”

“ஹாய் சியாவோ… எப்பொழுது சீனாவிலிருந்து வந்தாய்?”

“நேற்றுத்தான்…”

“படிப்பு, ஆராய்ச்சி எல்லாம் எப்படி இருந்தது?”

“நல்லபடியாய் முடிந்துவிட்டது சேர்… உங்களுடன் கதைப்பதற்கு நிறைய இருக்கின்றன. தனியாகக் கதைக்க வேண்டும். குறிப்பாக இரண்டு முக்கிய விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.”

“சரி… இன்று மாலை ஐந்து மணிக்கு பிறிம்பாங் லைபிறறிக்கு வர முடியுமா?”

“ஓகே… சேர்.”

`தனியாகக் கதைக்க வேண்டும்’ என்கின்றாள். என்னவாக இருக்கும்? மனம் அலை பாய்ந்தது.


சரியாக ஆறு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள், உள்ளூர்ப் பேப்பரில் வந்த கட்டிங் ஒன்றை நீட்டிய அம்மா, அதைப் பார்க்கும்படி சொன்னார்.

Monday, 1 September 2025

தூங்கும் பனிநீர்

 


குரல் வடிவம்/ காட்சிப்படிமம் : கெளசி