Tuesday 30 June 2015

இராஜகாந்தன் கவிதைகள் – 5


நீ சிரித்தால் 

சின்னதாய் நீ சிரித்தால்
சிறு பூக்கள் உன்னழகு.

நாணத்தில் நீ சிவந்தால்
தீயிலே பொன்னழகு.

கிசுகிசுத்து நீ கதைத்தால்
தென்றல் காற்றுன்னழகு.

அமைதியாய் நீ நடந்தால்
அசைந்துவரும் தேரழகு.

கால் கொலுசாய் நீ சிரித்தால்
கவிதை சொல்லும் உன்னழகு

கடலலையாய் நீ சிரித்தால்
அப்போதும் பேரழகு.

அள்ளிமுடிந்து கொண்டை போட்டால்
அது உனக்குத்தான் தனியழகு.

பள்ளிச் சிறுமி போல
பதறும் பேரழகு.

              துள்ளி விழுந்து கோபங்கொண்டால்
              கோடி பெறும் உன்னழகு.

              வெள்ளி வரும் கிழமைகளில் – நீ
              ஒப்பில்லா ஓரழகு
              வெண்ணிலாப் பேரழகு.
          






No comments:

Post a Comment